என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Monday 23 July 2012

நல்ல மனிதர்கள்

அன்பின் உருவமான,,

அன்னையை தரிசித்து,,

வரும் வழியில்,,

சீர்காழி கோவிந்தராஜனை,,

கண்டு,,

முருகன் பாடல்களை,,

அவர் பாட கேட்டு மகிழ்ந்து,,

புறப்பட்ட பொழுது,,

அங்கே வந்த ,,

திருமுருக கிருபானந்தவாரியாரை,,

சந்தித்து,,

சொற்பொழிவை கேட்டு மகிழ்ந்து,,

கிளம்பினேன்..

**
வரும் வழியில்,,

ஓரிடத்தில்,,

சினிமா படபிடிப்பு,,

நடந்து கொண்டு இருக்க,,

எட்டி பார்த்ததில்,,

சிம்ம குரலோன்,, சிவாஜி,,

கர்ஜித்து கொண்டு இருந்தார்...

**
மீண்டும் தொலை தூர,,

பிரயாணத்திற்கு தயாராகி,

சென்று கொண்டிருந்த போது,,

ஒரு பொட்டல் காட்டில்,,

ஆடு மேய்க்கும் சிறார்களுடன்,,

கல்வி பற்றி பேசி கொண்டு இருந்த,,

கர்மவீரரை கண்டு,,

மனமகிழ்ந்து,, சந்தித்து,,

ஆசி பெற்று புறப்பட்டேன்..

**
வெகு தூரம் சென்ற பிறகு,,

ஒரு அரசியல் கூட்டம்,,

எட்டி பார்த்ததில்,,

எம்,ஆர். ராதா , அட்டகாசமாக,,

கைதட்டல் ஒலிகளோடு ,,

பேசிக்கொண்டு இருந்தார்,..

ரசித்தபடி,,

சிறிது நேரம் கழித்து,,

கிளம்பினேன்,..

**
சேரும் இடம் வந்ததும்,,

இறங்கி ,,

அருகில் இருந்த கோவிலுக்குள்,,

நுழைந்தேன்,,

எளியோரோடு எளியோராக,,

நின்றபடி,,

சுவாமி தரிசனம் செய்து கொண்டு இருந்தார்,,

கருணை கொண்ட எம்,ஜி,ஆர்..

**
அவரை சந்தித்து மகிழ்வோடு,,

திரும்பினேன்..

சிறிது நேர ஓய்வில்,,

சட்டென்ற ஒரு பரபரப்பு,,

வீதி எங்கும்,,

ஆம்,,

சமூக நீதி போராளி,,

பெரியார் சென்று கொண்டு இருந்தார்..

**
காலங்கள்.. அன்று,,

பார்த்தோர் அனைவரும்,,

நல்ல மனிதர்கள்..

**
பெருமூச்சொன்றை விட்டபடி,,

அந்திம காலத்தில்,,

இன்றைய நிலையை ,,

நினைத்து பார்க்கிறேன்..

நல்ல மனிதர்,, என்ற,,

ஆன்மீகவாதியை,

தலைவரை,,

நடிகரை,,

இனம் காண முடியவில்லை..

**

No comments: