அன்பின் உருவமான,,
அன்னையை தரிசித்து,,
வரும் வழியில்,,
சீர்காழி கோவிந்தராஜனை,,
கண்டு,,
முருகன் பாடல்களை,,
அவர் பாட கேட்டு மகிழ்ந்து,,
புறப்பட்ட பொழுது,,
அங்கே வந்த ,,
திருமுருக கிருபானந்தவாரியாரை,,
சந்தித்து,,
சொற்பொழிவை கேட்டு மகிழ்ந்து,,
கிளம்பினேன்..
**
வரும் வழியில்,,
ஓரிடத்தில்,,
சினிமா படபிடிப்பு,,
நடந்து கொண்டு இருக்க,,
எட்டி பார்த்ததில்,,
சிம்ம குரலோன்,, சிவாஜி,,
கர்ஜித்து கொண்டு இருந்தார்...
**
மீண்டும் தொலை தூர,,
பிரயாணத்திற்கு தயாராகி,
சென்று கொண்டிருந்த போது,,
ஒரு பொட்டல் காட்டில்,,
ஆடு மேய்க்கும் சிறார்களுடன்,,
கல்வி பற்றி பேசி கொண்டு இருந்த,,
கர்மவீரரை கண்டு,,
மனமகிழ்ந்து,, சந்தித்து,,
ஆசி பெற்று புறப்பட்டேன்..
**
வெகு தூரம் சென்ற பிறகு,,
ஒரு அரசியல் கூட்டம்,,
எட்டி பார்த்ததில்,,
எம்,ஆர். ராதா , அட்டகாசமாக,,
கைதட்டல் ஒலிகளோடு ,,
பேசிக்கொண்டு இருந்தார்,..
ரசித்தபடி,,
சிறிது நேரம் கழித்து,,
கிளம்பினேன்,..
**
சேரும் இடம் வந்ததும்,,
இறங்கி ,,
அருகில் இருந்த கோவிலுக்குள்,,
நுழைந்தேன்,,
எளியோரோடு எளியோராக,,
நின்றபடி,,
சுவாமி தரிசனம் செய்து கொண்டு இருந்தார்,,
கருணை கொண்ட எம்,ஜி,ஆர்..
**
அவரை சந்தித்து மகிழ்வோடு,,
திரும்பினேன்..
சிறிது நேர ஓய்வில்,,
சட்டென்ற ஒரு பரபரப்பு,,
வீதி எங்கும்,,
ஆம்,,
சமூக நீதி போராளி,,
பெரியார் சென்று கொண்டு இருந்தார்..
**
காலங்கள்.. அன்று,,
பார்த்தோர் அனைவரும்,,
நல்ல மனிதர்கள்..
**
பெருமூச்சொன்றை விட்டபடி,,
அந்திம காலத்தில்,,
இன்றைய நிலையை ,,
நினைத்து பார்க்கிறேன்..
நல்ல மனிதர்,, என்ற,,
ஆன்மீகவாதியை,
தலைவரை,,
நடிகரை,,
இனம் காண முடியவில்லை..
**
No comments:
Post a Comment