என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Wednesday 18 July 2012

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா

ஆயிற்று,, நாற்பத்து ஐந்து வருடங்களுக்கு மேல்..

ஒரு தலைமுறையினர் ,,

செய்த தவறுக்கு,,

இன்று வரை தவிக்கிறோம்..

**
குற்ற உணர்ச்சி அழுத்துகிறது..

நாங்கள் நிம்மதியாக இல்லை ,,

மேலிருந்து அமைதியாக பார்த்து கொண்டு இருக்கிறீரே,,

மீண்டும்,,

பிறந்து வரமாட்டீர்களா,, ?

என்று ஏங்கி கொண்டு இருக்கிறார்கள்,,

ஒவ்வொரு தமிழனும்..

**
உங்கள் வரவை எதிர்பார்த்து காத்திருக்கும்,,

சாதாரண பாமரர்கள் நாங்கள்..

எங்கள் முன்னோர் செய்தது தவறுதான்,,

வெற்று அலங்கார பேச்சுக்கும்,,

சினிமா கவர்ச்சிக்கும் மயங்கி,,

உங்களை தோற்கடித்தது தவறுதான்..

**
இன்று அவர்கள் சார்பில்,,

நாங்க மன்னிப்பு கோருகிறோம் உங்களிடம்..

இன்று உங்கள் பிறந்த நாள்..

**
எங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா...

நாங்கள்...

என்றும் உங்களை மறவா,,

எளிய தமிழர்கள் ...

No comments: