என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Wednesday 27 June 2012

வடகிழக்கு மக்கள்..

நேற்றைய ஒரு தொலைக்காட்சியில்,,

அழகிய மலைகிராமம் ஒன்றை கண்டேன்..

அழகிய இயற்கை சூழ,,

அழகாக மின்னிய அந்த கிராமம்,,

ஒரு வித ஈர்ப்பை கொடுத்தது,,

**
அந்த மக்களின்,,

வித்தியாசமான, சொற்களும்,,

மொழிகளும் அழகிய இசை போல,,

அத்தனை அழகு..

மொழி புரியாவிடினும்,,

அவர்களின் பேச்சு பிடித்திருந்தது..

**
அவர்கள் மிக அற்புதமானவர்கள் போலும்,,

ஆம்,,

தம்,, கலாசாரம் மறவாது,,

கடும் உழைப்பில் ஈடுபடும்,,

மக்கள் அவர்கள்..

நிரம்ப பிடித்திருந்தது அவர்களை..

**
அவ்வப்போது தொலைக்காட்சிகளில்,

அவர்களை காண்கிறேன்..

நியாயப்படி அவர்களுக்கும்,,

நமக்கும் இடைவெளி நிகழாதபடி,,

அரசியல்வாதிகள் பார்த்திருக்கவேண்டும்..

நமக்கு அந்த கொடுப்பினை இல்லை..

**
இருப்பினும்,,

மனதிற்குள் குறித்து வைத்து கொண்டேன்,,

என்றாவது ஒரு நாள்,,

நீண்ட பயணம் செய்து ,,

அந்த மலை கிராம மக்களோடு,,

சில காலம் கலந்திருக்க வேண்டும்...

**
அவர்கள்..

இந்தியாவின் வடகிழக்கு,,

மாநில மக்கள்..


No comments: