இயல்பை தொலைத்து,,
வேஷம் கட்ட விரும்பவில்லை..
மகிழ்வென்ற பொழுதுகள்,,
வேண்டாம் இப்போதைக்கு..
***
நான் மகிழ்வு வேடம் கொண்டபோதெல்லாம்..
என் மனது உறுத்துகிறது,,
என்னை மறந்துவிட்டாயா, என்று,,
என் ஏக்கங்களும்,,
ரணங்களும்,,
உள்ளிருந்து கதறுகின்றன..
என் செய்ய .. ? விலகுவதை தவிர
No comments:
Post a Comment