என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Wednesday 27 June 2012

கடும் கோபம்,, கடவுளின் மீது

கடும் கோபம் கொண்டேன்,,

கடவுளின் மீது,,

நிறையவே சோதித்து விட்டான்,,

ரணங்கள்,,

வலிகள் உக்கிரம் பெற்று,,

கதறிய போதும் ,,

அவன் முகத்தை திருப்பி கொண்டேன்,,

**
காலம் வெகு வேகமாக ,,

கரைந்த ஒரு நாளில்,,

மெல்லிய உணர்வுகள்,,

சற்றே மகிழ்வோடு இருந்தன,,

**
சிந்தித்தேன்,,

என்னை ,,

என் நிலையறிந்து,,

என்னை அழகாக,,

பக்குவபடுத்தி இருக்கிறார்,,

இறைவன் என்று..

**
ஆம்,,

முதலிலேயே வசந்தம் கண்டிருந்தால்,,

நிச்சயம் பின்னொரு நாளில்,,

வீழ்ந்திருப்பேன்,..

**
பக்குவமற்ற மனதில்,,

அப்போது வாழ்ந்திருந்தேன் என்று,,

இப்போது புரிகிறது..

*******
ஜெய் ஷிர்டி சாய்ராம்..
*******


No comments: