நான் இதுவரை கவிதையே எழுதவில்லை...
எனக்குள் புதைந்து கிடக்கும்,,
ஆழமான வலிகள்,,
எண்ணங்கள்,
மகிழ்வுகளை..
அவ்வப்போது முகநூலில் ,,
தெளித்து விடுகிறேன் ,, அவ்வளவே..
**
கவிதை என்பதற்கு இலக்கணம் உண்டு,,
வார்த்தைகள்,, சொற்கள்,,
அழகுற இருத்தல் வேண்டும்..
**
ஆனால்,,
நான் அழகுற சொற்களும்,,
வாக்கியங்களும் வேண்டுமென,,
வர்ணித்து எழுதி,,
எழுதியவற்றை ரசித்து பார்ப்பதில்லை..
**
விநாடி நேரத்தில்,,
எனக்குள் புதைந்தவைகளை ,
தெளித்து விட்டு,,
மறைந்து விடுகிறேன்,,
என் மனத்திருப்திக்காக..
**
ஆக,, நான் கவிஞன் அல்ல..
No comments:
Post a Comment