என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Saturday 23 June 2012

நான் கவிஞன் அல்ல

நான் இதுவரை கவிதையே எழுதவில்லை...

எனக்குள் புதைந்து கிடக்கும்,,

ஆழமான வலிகள்,,

எண்ணங்கள்,

மகிழ்வுகளை..

அவ்வப்போது முகநூலில் ,,

தெளித்து விடுகிறேன் ,, அவ்வளவே..

**
கவிதை என்பதற்கு இலக்கணம் உண்டு,,

வார்த்தைகள்,, சொற்கள்,,

அழகுற இருத்தல் வேண்டும்..

**
ஆனால்,,

நான் அழகுற சொற்களும்,,

வாக்கியங்களும் வேண்டுமென,,

வர்ணித்து எழுதி,,

எழுதியவற்றை ரசித்து பார்ப்பதில்லை..

**
விநாடி நேரத்தில்,,

எனக்குள் புதைந்தவைகளை ,

தெளித்து விட்டு,,

மறைந்து விடுகிறேன்,,

என் மனத்திருப்திக்காக..

**
ஆக,, நான் கவிஞன் அல்ல..

No comments: