என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Thursday 21 June 2012

ஏக்கங்களே வாழ்வியலாக

அன்று நிறைய விருப்பப்பட்டேன்,,

முயற்சித்தேன்,,

என்னுடன் சேர்ந்தவர்களையும்,

முயற்சிக்க சொன்னேன்,,

**
கிடைத்தது அவர்களுக்கு,

மகிழ்ந்தார்கள்..

பிறகு,,

எங்கோ எட்டா உயரத்திற்கு ,,

சென்று விட்டார்கள்..

**
அந்த வயது ,,

அந்த மகிழ்வு,,

வானம் வசப்பட்டது ,

அவர்களுக்கு..

எனக்கு எட்டாத கனியாகி விட்டது,,

வேடிக்கை பார்த்தபடி நின்றேன்,,

**
காலம் வெகு வேகமாக சுழன்றாலும்,

அடி மனதில்,,

அந்த ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது,,

வலித்தது அவ்வப்போது..

**
இளமை தொலைத்த ஒரு நாளில்,

மீண்டும்,

வலி தாங்க முடியாமல்,

முயற்சித்த போது,,

கிடைத்தது..

**
கிடைத்தென்ன பயன்,

என்ற மன நிலையில்,..

அந்த வாய்ப்பில்,

முழுதாக,,

ஒன்ற முடியாது,,

தவிக்கிறேன்..

**
ஏக்கங்களே வாழ்வியலாக.. இறுதிவரை தொடரும் ..

**

No comments: