அன்று நிறைய விருப்பப்பட்டேன்,,
முயற்சித்தேன்,,
என்னுடன் சேர்ந்தவர்களையும்,
முயற்சிக்க சொன்னேன்,,
**
கிடைத்தது அவர்களுக்கு,
மகிழ்ந்தார்கள்..
பிறகு,,
எங்கோ எட்டா உயரத்திற்கு ,,
சென்று விட்டார்கள்..
**
அந்த வயது ,,
அந்த மகிழ்வு,,
வானம் வசப்பட்டது ,
அவர்களுக்கு..
எனக்கு எட்டாத கனியாகி விட்டது,,
வேடிக்கை பார்த்தபடி நின்றேன்,,
**
காலம் வெகு வேகமாக சுழன்றாலும்,
அடி மனதில்,,
அந்த ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது,,
வலித்தது அவ்வப்போது..
**
இளமை தொலைத்த ஒரு நாளில்,
மீண்டும்,
வலி தாங்க முடியாமல்,
முயற்சித்த போது,,
கிடைத்தது..
**
கிடைத்தென்ன பயன்,
என்ற மன நிலையில்,..
அந்த வாய்ப்பில்,
முழுதாக,,
ஒன்ற முடியாது,,
தவிக்கிறேன்..
**
ஏக்கங்களே வாழ்வியலாக.. இறுதிவரை தொடரும் ..
**
No comments:
Post a Comment