என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Thursday 7 June 2012

அன்பு மனைவிக்கு ஒரு கடிதம்

***அன்பு மனைவிக்கு ஒரு கடிதம்***

ஓயாமல் துடிக்கும்,,

இதயம்,,

ஒரு நாள் நின்று போகும்..

நான் இறந்து போவேன்..

உடல் மக்கி போகும்..

அல்லது,,

தீ நாக்குகளுக்கு,,

இரையாகிவிடும்..

**
உடலற்று போன நான்,

என் ஆன்மாவோடு ,,

மட்டுமே,,

இவ்வுலகை விட்டு,,

வெளியேறுவேன்..

**
ஆன்மா அடுத்து,,

எங்கோ செல்லும்..

அது எனக்கு தெரியாது,,

**
ஆனால்,,

ஆன்மாவுக்குள்,,

அழியாத பொக்கிஷமாய்,,

என் வாழ்வின் நினைவுகள் இருக்கும்...

அந்த நினைவுகளில்,,

பெரும் பகுதி,,

உன்னை சுற்றியே இருக்கும்..

**
இறந்தும்,,

இறவாது,,

உன் மீது,,

நான் கொண்ட,,

காதல் இருக்கும்,,

என்றென்றும் ...

**
வணக்கத்துடன்,,

உடலற்ற கணவன்..

***
காதல்.. அழகிய காதல்..
**

No comments: