என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Saturday 16 June 2012

வானம் பார்த்தேன்

வானம் பார்த்தேன்,,,

கடும் கோடைகாலத்தில்,,


நண்பகல் பொழுதில்..


ஓர் நாள் ..

**
கண்கள் வலித்தது,,

எரிச்சலோடு,,

நீர் வடிந்தது,.,

கதிரவனின் உக்கிரம்,,

தாளாமல்,,

உடல் வியர்த்தது,,.

இருப்பினும்,,

வானம் பார்த்தபடி இருந்தேன்,,.

**
மோசமானதொரு,,

அக்னி பார்வையில்,

சிக்கி கொண்டேன்...

**
இப்போது,,

உக்கிரம் தாளாமல்,,

சற்றே தலை குனிந்து,,

பூமி பார்த்தேன்,,

கதிரவனின் அக்னியை,

உள்வாங்கி,

என் கால்களை சுட்டெரித்தது..

**
இருப்பினும்,,

உறுதிகொண்டு நின்றேன் ,,

குளிரோடு சேர்ந்த,,

மழைகாலம் வரும் வரை..

**
நீண்ட காத்திருப்பிற்கு பின்,,

மழைகாலம் அழகாக வந்தது..

மேகங்கள் மெல்ல,,

கதிரவனை மறைத்து..

என்னை குளிர்வித்தது,,

மழை நீர் கொண்டு..


**
சூழல்.. வலிகளுக்கு பின்னே வாழ்க்கை ..

***

No comments: