***மனதின் சிதறல்கள் துளிகளாக.. ***
***
ஏதோ சலனத்திற்கு ஆட்பட்டு,,
குற்ற உணர்வில்,,
தவிக்கிறது மனம்,..
மனம் என்னும் மாயை ,,
செய்யும் லீலைகள்,,
சித்திரவதைகள்..
வெகு துயரம் கலந்த அழகு..
**
தேர்ந்த,
சிறந்த கவிதை எழுத,,
நான் கவிஞன் இல்லை..
என் மனதில் தொடரும்,,
ஆவேச அலைகளின் ,,
வடிகால்,,
மட்டுமே என் பதிவுகள்..
***
இனம் ,, மொழி கண்டு,
நட்பு தேடும்,,
அரசியல்வாதிகள் போல் அல்லாமல்,,
மனம் கண்டு,,
நட்பை தேடுவோம்,,
சுவாசிப்போம்,..
***
ரயில் பயணம் போல,,
விரைகிறது காலம்,,
ஓடி மறைகிறது,,
சூழலும்,,
நட்புகளும்,,
உறவுகளும்..
***
இதயத்தில் இருந்து,,
வெடித்து கிளம்பிய
வேதனை,,
மெளனமாக வெளிப்பட்டது..
கண்ணீர் மட்டுமே சிறு துளியாய்,,
வேதனையின் சாட்சியாய்..
வலி கொண்ட இதயம்,,
சற்றே நிதானித்து,,
நிலை கொண்டு.....
சற்றே பக்குவம் பெற்ற ,,
மனிதனாக,,
எல்லை தாண்டிய நிலையில்.
***
ஏதோ ஒன்று புரிகிறது,,
என்னை சுற்றி,, ( அல்லது நம்மை சுற்றி )
பெரும் மாயை இருக்கிறது..
இது ஒரு கனவு போல இருக்கிறது,,
ஆம் ,, நான் இங்கு இல்லை..
நான் எங்கோ இருக்கிறேன்,,
இது என் நீண்ட கனவாக இருக்கலாம்..
புரிந்தும்,,
புரியாமலும்,,
எங்கோ,
ஏதோ, என்னை ,,
வழி நடத்தி செல்கிறது..
No comments:
Post a Comment