என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Friday 29 June 2012

**** எழுபதுகளில் ஒரு நாள் ****

**** காலச்சக்கரத்தில் சில மணித்துளிகள் ****

சிலிர்த்தேன்,,

இடறி விழுந்தேன்,,

ஈரமான அழகிய குளக்கரையில்,,

ஈரமான அழகிய,,

ஒரு தாவணி பெண்ணை கண்டு..

**
சிறு புன்னகையை ,,

பரிசாக உதிர்த்தபடி,,

நகர்ந்தாள் வெகு வேகமாக..

**
சற்றே அசடு வழிய ,,

எழுந்தேன்,,

மறைந்து விட்டிருந்தாள்..

**
மனதை அவளிடம் விட்டுவிட்டு,,

உடலுக்கு குளிப்பாட்டி,,

வேகமாக கோவிலுக்கு வந்தேன்,,

**
அழகிய தீபம் ஒன்றை ஏற்றி,,

அழகாக வழிபட்டு,,

கோவில் பிரகாரம் சுற்றி,,

வந்து,

கோவில் மணியை அழகாக,,

ஒலிக்கவிட்டு,,

சிறு பூக்கூடையுடன்,,

தோழிகளோடு அமர்ந்தாள்..

**
சற்றே மறைவாக,,

நான் கவனித்ததை அறிந்து,,

வெட்கம் கலந்து,,

கால் பெருவிரலால்,,

பூமியில் கோலமிட்டு,,

சட்டென்று நகர்ந்தாள்..

**
இம்முறை,,

எனக்கு,,

என் கண்களை,,

வினாடி நேரத்தில் சந்தித்த,,

அவளின் படபடத்த,,

விழிகளை பரிசாக தந்தாள்..

**
மீண்டும்,,

மறு நாள் காலையை,,

எதிர்பார்த்தபடி,,

அங்கிருந்து நகர்ந்தேன்,,

எழுபதுகளில் ஒரு நாள்..

No comments: