**** எழுபதுகளில் ஒரு நாள் ****
**** காலச்சக்கரத்தில் சில மணித்துளிகள் ****
சிலிர்த்தேன்,,
இடறி விழுந்தேன்,,
ஈரமான அழகிய குளக்கரையில்,,
ஈரமான அழகிய,,
ஒரு தாவணி பெண்ணை கண்டு..
**
சிறு புன்னகையை ,,
பரிசாக உதிர்த்தபடி,,
நகர்ந்தாள் வெகு வேகமாக..
**
சற்றே அசடு வழிய ,,
எழுந்தேன்,,
மறைந்து விட்டிருந்தாள்..
**
மனதை அவளிடம் விட்டுவிட்டு,,
உடலுக்கு குளிப்பாட்டி,,
வேகமாக கோவிலுக்கு வந்தேன்,,
**
அழகிய தீபம் ஒன்றை ஏற்றி,,
அழகாக வழிபட்டு,,
கோவில் பிரகாரம் சுற்றி,,
வந்து,
கோவில் மணியை அழகாக,,
ஒலிக்கவிட்டு,,
சிறு பூக்கூடையுடன்,,
தோழிகளோடு அமர்ந்தாள்..
**
சற்றே மறைவாக,,
நான் கவனித்ததை அறிந்து,,
வெட்கம் கலந்து,,
கால் பெருவிரலால்,,
பூமியில் கோலமிட்டு,,
சட்டென்று நகர்ந்தாள்..
**
இம்முறை,,
எனக்கு,,
என் கண்களை,,
வினாடி நேரத்தில் சந்தித்த,,
அவளின் படபடத்த,,
விழிகளை பரிசாக தந்தாள்..
**
மீண்டும்,,
மறு நாள் காலையை,,
எதிர்பார்த்தபடி,,
அங்கிருந்து நகர்ந்தேன்,,
எழுபதுகளில் ஒரு நாள்..
No comments:
Post a Comment