என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Thursday 14 June 2012

தீரம்.. ஜெயம்

நிதர்சனங்களை,,

எதிர்கொள்ள தயங்கி,,

விலகி நின்றிருக்கிறேன்..

அவ்வப்போது,,

அந்தந்த சூழலின் பயம் கண்டு..

காலம் கடந்து,,

விலகி நின்ற தவறுகள்,,

உறைக்கும் போது,,

வலிகள் அதிகமாகின்றது..

**
காலம் கடந்து ,,

இன்று நான் பெற்ற ஞானம் இதுதான்,,

உனக்கென்ற பாதையில்,,

உறுதி கொண்டு,,

எதிர்படும் இடர்பாடுகளை,,

தீரத்தோடு எதிர்நோக்கினால்,

மட்டுமே,,

வாழ்வியல் அழகுற மிளிரும்..

**
இல்லையென்றால்,,

நல்லவன் என்ற பெயர் மட்டுமே,,

கிடைக்கும்,,

கூடவே இன்னொரு பெயரும்,,

பிழைக்க தெரியாதவன் என்று..

**
சூழல்.. தீரம்.. ஜெயம்

**

No comments: