முதல் காதல்,,
எப்போது உதித்தது என,,
நினைவில்லை..
உன்னை எப்போது பிடித்தது,,
என்றும் தெரியவில்லை..
**
ஆனாலும் தொடர்ந்த ,
தினசரி பேருந்து நிறுத்தத்தில்,
இருந்து,,
தொடர் பிரயாணத்தில்,,
மெல்ல என் மனம்,,
உன்னிடத்திற்கு அழகாக,,
தாவி கொண்டிருந்ததை நான் அறியவில்லை..
**
ஏதோ ஒரு அனிச்சை செயலால்,,
ஒரு முறை நீ திரும்பி,,,
சற்றே பின் தள்ளி நின்றிருந்த,,
என் கண்களை சில நொடி,,
உன் கண்கள்,,
சந்தித்த பொழுது,,
நமக்குள் முன்னமே உருவான,,
மெல்லிய காதல்,,
மெல்ல புரிந்தது நமக்கு...
**
நிறைய நிகழ்வுகள்,,
தினசரி சந்திக்க வாய்ப்பு இருந்தும்,,
பேசிக்கொள்ளவே இல்லை.
ஏனோ பெரும் தயக்கம்,
இருவரிடமும்..
ஆனால்,,
நமக்குள் மிக அழகான,,
காதல் பூத்திருந்தது...
**
என் உறவு பெண்ணும் கூட நீ,,
தொடர்ந்த பார்வை பரிமாற்றங்கள் ,,
நமக்குள் இருந்த காதலை,,
அழுத்தமாக சொல்லின..
தொடர்ந்த கனவுகளில்,, அன்று,,
நீ மட்டுமே வந்தாய்..
**
அது என் அழகான,,
இருபதுகளின் வயது..
சற்றே வாழ்வதற்ககான தேடலை ,,
நான் துவங்கியபோதும்,, கூட,,
எனக்கான தேடலாக இல்லாமல்,,
நமக்கான தேடலாக தேடினேன்...
கிடைத்தது ஒரு வாழ்க்கை ,,
வெளிநாட்டில்...
பிரித்தது சில காலம் நம்மை..
**
திரும்ப ஒரு நாள் வந்தபோது,,
உன் அழகான திருமண பத்திரிக்கை,,
என் வீட்டு வரவேற்பு அறையை ,,
அழகாக அலங்கரித்து..
சிலையானேன் சில நிமிடம்,,
சுதாரித்தேன்,,
என்றோ முடிந்திருந்தது,,
உன் திருமணம்..
**
காலம் கடந்த ஒரு நாளில்,,
என் உறவினருடன்,
உன் வீட்டிற்கு வந்தபோது,,
மெல்ல பேசினாய் ,,
நலமா என்று..
பிறகு,, என்ன நினைத்தாயோ,
தூளியில் உறங்கி கொண்டு இருந்த,
உன் குழந்தையை,,
என் மடியில் கிடத்தினாய்..
**
சற்றே பக்குவம் அடைந்திருந்த ,
என் மனதால்,
குழந்தைக்கு என் ஆசிகளை தெரிவித்தேன்,,
**
பிறிதொரு நாளில் என் திருமணமும் முடிந்தது...
ஏனோ அதன் பின்,,
இருவரும் சந்திக்கும் தருணம் கூட நிகழவில்லை..
வாழ்க்கை சூழல்,,
வெகு வேகமாக நம்மை நகர்த்தியது போலும்.
**
வாழ்க்கை தீர்ந்த ஒரு பொழுதில்,
ஒரு உறக்கம் வராத பின்னிரவில்,,
இந்த தள்ளாத அந்திம வயதில்,,
ஏனோ உன் நினைவு.
**
இந்த அந்திம வயதிலும்,,
அழகிய உன் இளமை தோற்றத்தின் நினைவுகளோடு..
மெல்லிய கண்ணீரை வெளிப்படுத்தியபடி,,
மரணம் நோக்கி காத்திருக்கிறேன்..
***
((நிஜத்தோடு சிறிதாக கற்பனை கலந்து.. ))
எப்போது உதித்தது என,,
நினைவில்லை..
உன்னை எப்போது பிடித்தது,,
என்றும் தெரியவில்லை..
**
ஆனாலும் தொடர்ந்த ,
தினசரி பேருந்து நிறுத்தத்தில்,
இருந்து,,
தொடர் பிரயாணத்தில்,,
மெல்ல என் மனம்,,
உன்னிடத்திற்கு அழகாக,,
தாவி கொண்டிருந்ததை நான் அறியவில்லை..
**
ஏதோ ஒரு அனிச்சை செயலால்,,
ஒரு முறை நீ திரும்பி,,,
சற்றே பின் தள்ளி நின்றிருந்த,,
என் கண்களை சில நொடி,,
உன் கண்கள்,,
சந்தித்த பொழுது,,
நமக்குள் முன்னமே உருவான,,
மெல்லிய காதல்,,
மெல்ல புரிந்தது நமக்கு...
**
நிறைய நிகழ்வுகள்,,
தினசரி சந்திக்க வாய்ப்பு இருந்தும்,,
பேசிக்கொள்ளவே இல்லை.
ஏனோ பெரும் தயக்கம்,
இருவரிடமும்..
ஆனால்,,
நமக்குள் மிக அழகான,,
காதல் பூத்திருந்தது...
**
என் உறவு பெண்ணும் கூட நீ,,
தொடர்ந்த பார்வை பரிமாற்றங்கள் ,,
நமக்குள் இருந்த காதலை,,
அழுத்தமாக சொல்லின..
தொடர்ந்த கனவுகளில்,, அன்று,,
நீ மட்டுமே வந்தாய்..
**
அது என் அழகான,,
இருபதுகளின் வயது..
சற்றே வாழ்வதற்ககான தேடலை ,,
நான் துவங்கியபோதும்,, கூட,,
எனக்கான தேடலாக இல்லாமல்,,
நமக்கான தேடலாக தேடினேன்...
கிடைத்தது ஒரு வாழ்க்கை ,,
வெளிநாட்டில்...
பிரித்தது சில காலம் நம்மை..
**
திரும்ப ஒரு நாள் வந்தபோது,,
உன் அழகான திருமண பத்திரிக்கை,,
என் வீட்டு வரவேற்பு அறையை ,,
அழகாக அலங்கரித்து..
சிலையானேன் சில நிமிடம்,,
சுதாரித்தேன்,,
என்றோ முடிந்திருந்தது,,
உன் திருமணம்..
**
காலம் கடந்த ஒரு நாளில்,,
என் உறவினருடன்,
உன் வீட்டிற்கு வந்தபோது,,
மெல்ல பேசினாய் ,,
நலமா என்று..
பிறகு,, என்ன நினைத்தாயோ,
தூளியில் உறங்கி கொண்டு இருந்த,
உன் குழந்தையை,,
என் மடியில் கிடத்தினாய்..
**
சற்றே பக்குவம் அடைந்திருந்த ,
என் மனதால்,
குழந்தைக்கு என் ஆசிகளை தெரிவித்தேன்,,
**
பிறிதொரு நாளில் என் திருமணமும் முடிந்தது...
ஏனோ அதன் பின்,,
இருவரும் சந்திக்கும் தருணம் கூட நிகழவில்லை..
வாழ்க்கை சூழல்,,
வெகு வேகமாக நம்மை நகர்த்தியது போலும்.
**
வாழ்க்கை தீர்ந்த ஒரு பொழுதில்,
ஒரு உறக்கம் வராத பின்னிரவில்,,
இந்த தள்ளாத அந்திம வயதில்,,
ஏனோ உன் நினைவு.
**
இந்த அந்திம வயதிலும்,,
அழகிய உன் இளமை தோற்றத்தின் நினைவுகளோடு..
மெல்லிய கண்ணீரை வெளிப்படுத்தியபடி,,
மரணம் நோக்கி காத்திருக்கிறேன்..
***
((நிஜத்தோடு சிறிதாக கற்பனை கலந்து.. ))
No comments:
Post a Comment