அன்று நான் யதார்த்தமானவன்,
சற்றே குழந்தை போலதான்..
வளர்ந்த பின்னும்,
சூதும் வாதும் தெரியவில்லை..
**
கை கொட்டி பரிகசித்த,,
சமூகம் முன்,,
பரிதவித்து நின்றேன்..
**
ரணங்களை தின்ற மனதோடு,,
இளமை என்னும் வசந்த காலத்தை,,
அதற்குரிய வசந்தம் இல்லாமல்,,
கழித்த போதும்,
விடவில்லை இந்த சமூகம்,,
பரிகசிக்க...
**
அது என்னவோ,,
சூதும் வாதும் தெரிந்தால்தான்,,
பிழைக்க முடியுமாம்,
சமூகத்தின் அசைக்க முடியாத,,
நம்பிக்கை...
**
நேர்மையும்,, தூய்மையும்
பிழைக்க உதவாதாம்..
ஆனால்,,
அரசியலை மட்டும்,,
அலசுவார்களாம் தூய்மை பற்றி..
எங்கே போய் சொல்ல,,
இந்த கொடுமையை..?
**
அட்டகாசமான முகமூடி,,
அணிந்து,,
அழகாக காய்களை நகர்த்தி,,
வாழ்கையில் உச்சத்தை (அதாவது வசதிகளை)
அடைந்து விட்டு,,
ஏளன பார்வை ஒன்றை,,
அப்பாவிகள் மீது,
வீசுகிறது,
அதிபுத்திசாலி சமூகம்..
**
இங்கே பாவம் பாமரன் ..
நானும் கூட,,
ஏன் ,,
நாமும் கூட..
No comments:
Post a Comment