என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Friday 29 June 2012

யதார்த்தமானவன்

அன்று நான் யதார்த்தமானவன்,

சற்றே குழந்தை போலதான்..

வளர்ந்த பின்னும்,

சூதும் வாதும் தெரியவில்லை..

**
கை கொட்டி பரிகசித்த,,

சமூகம் முன்,,

பரிதவித்து நின்றேன்..

**
ரணங்களை தின்ற மனதோடு,,

இளமை என்னும் வசந்த காலத்தை,,

அதற்குரிய வசந்தம் இல்லாமல்,,

கழித்த போதும்,

விடவில்லை இந்த சமூகம்,,

பரிகசிக்க...

**
அது என்னவோ,,

சூதும் வாதும் தெரிந்தால்தான்,,

பிழைக்க முடியுமாம்,

சமூகத்தின் அசைக்க முடியாத,,

நம்பிக்கை...

**
நேர்மையும்,, தூய்மையும்

பிழைக்க உதவாதாம்..

ஆனால்,,

அரசியலை மட்டும்,,

அலசுவார்களாம் தூய்மை பற்றி..

எங்கே போய் சொல்ல,,

இந்த கொடுமையை..?

**
அட்டகாசமான முகமூடி,,

அணிந்து,,

அழகாக காய்களை நகர்த்தி,,

வாழ்கையில் உச்சத்தை (அதாவது வசதிகளை)

அடைந்து விட்டு,,

ஏளன பார்வை ஒன்றை,,

அப்பாவிகள் மீது,

வீசுகிறது,

அதிபுத்திசாலி சமூகம்..

**
இங்கே பாவம் பாமரன் ..

நானும் கூட,,

ஏன் ,,

நாமும் கூட..

No comments: