அன்றொரு நாள்...
மழை இரவில்..
கிராமத்து சாலை வழியே..
நான்,,
மணி சப்தம் எழுப்பியபடி,
சென்ற,
மாட்டு வண்டியில் பயணித்தேன்..
**
தாமதமாக வந்த பேருந்தில்,,,
ஒற்றை ஆளாக வந்து,,
அந்த கிராமத்தில்,,
இறங்கியபோது,.,
நல்ல மழை பிடித்திருந்தது,,
**
இருளில்..
அருகில் இருந்த ஒற்றை,,
வீடும் பூட்டி இருந்தது..
**
சிரமத்தோடு,,
மழையை சபித்தபடி ,
நின்றிருந்தேன்,,
சிறிது நேரத்தில்,,
மாட்டு வண்டியில்,,
வண்டிக்காரன் ஒருவன் ,,
வந்தான்..
**
தம்பி ஊருக்கு புதுசா,,
என்று கேட்டான்..
ஆம் என்று ,,
அவன் அழைப்பை ஏற்று ,,
வண்டியில் அமர்ந்தேன்,.,
அவனும் பேச்சு கொடுத்து கொண்டே ,,
வந்தான்,.
கள்ளமற்ற பேச்சு..
**
ஒரு பெரிய வீட்டின்,,
முன் நிறுத்தினான்..
மணியகாரர் வீடு தம்பி ,,
என்றான்..
**
அங்கிருந்த பெரியவர்கள்,,
நான் யாரென்று தெரியாத போதிலும்,,
முதலில் தலை துவட்டி கொள்ள ,,
துண்டு கொடுத்து,,
சுவை மிகுந்த தேநீர் கொடுத்து,,
பிறகு,,
என்னை சற்று ஓய்வெடுக்க வைத்து,,
கேட்டனர்,,
தம்பி என்ன வேலையாக
இந்த ஊருக்கு வந்தீர்கள் என்று..
**
நான் யார் என்று தெரியாமலே,,
அன்பு வார்த்தைகளோடு,,
உபசரித்த அந்த வெள்ளை ,,
உள்ளங்களை ,,
கடவுளாக பார்த்தேன்..
**
இந்த ஊருக்கு,,
புதிதாக மாற்றலாகி வந்த ,,
அரசு பணியாளர் என்று
கூறினேன்..
ஏதோ அவர்கள் வீட்டு பிள்ளை,,
போல என்னை நினைத்து,,
என்னை உபசரித்து,,.
விடிந்த பின்,,
எனக்கு அந்த கிராமத்தில்,,
தங்குவதற்கு,,
அனைத்து உதவியும் செய்தனர்..
**
அன்பு மழையில்,,
அன்றைய கிராமத்து மனிதர்களிடம்,,
தெரிந்த வெள்ளந்தி மனதை,
இன்றும்,,
இந்த அந்திம காலத்தில்,,
தன்னந்தனியே,,
உறவுகள் அற்ற நிலையில்,,
நினைத்து பார்க்கிறேன்..
கண்ணீரை தவிர,,
வேறு ஏதும் இல்லை.. என்னிடம்..
**
((அது ஒரு காலம்,,
ஐம்பது,, அறுபதுகளில்,,
நடந்த நிகழ்வுகளை,,
எப்போதோ யாரோ சொல்ல கேட்டதின்,,
நினைவு..
இந்த கற்பனை.. ))
**
இன்று ?? மனிதர்கள்.. ??
வெள்ளந்தி மனது ?? எங்கே ??
மழை இரவில்..
கிராமத்து சாலை வழியே..
நான்,,
மணி சப்தம் எழுப்பியபடி,
சென்ற,
மாட்டு வண்டியில் பயணித்தேன்..
**
தாமதமாக வந்த பேருந்தில்,,,
ஒற்றை ஆளாக வந்து,,
அந்த கிராமத்தில்,,
இறங்கியபோது,.,
நல்ல மழை பிடித்திருந்தது,,
**
இருளில்..
அருகில் இருந்த ஒற்றை,,
வீடும் பூட்டி இருந்தது..
**
சிரமத்தோடு,,
மழையை சபித்தபடி ,
நின்றிருந்தேன்,,
சிறிது நேரத்தில்,,
மாட்டு வண்டியில்,,
வண்டிக்காரன் ஒருவன் ,,
வந்தான்..
**
தம்பி ஊருக்கு புதுசா,,
என்று கேட்டான்..
ஆம் என்று ,,
அவன் அழைப்பை ஏற்று ,,
வண்டியில் அமர்ந்தேன்,.,
அவனும் பேச்சு கொடுத்து கொண்டே ,,
வந்தான்,.
கள்ளமற்ற பேச்சு..
**
ஒரு பெரிய வீட்டின்,,
முன் நிறுத்தினான்..
மணியகாரர் வீடு தம்பி ,,
என்றான்..
**
அங்கிருந்த பெரியவர்கள்,,
நான் யாரென்று தெரியாத போதிலும்,,
முதலில் தலை துவட்டி கொள்ள ,,
துண்டு கொடுத்து,,
சுவை மிகுந்த தேநீர் கொடுத்து,,
பிறகு,,
என்னை சற்று ஓய்வெடுக்க வைத்து,,
கேட்டனர்,,
தம்பி என்ன வேலையாக
இந்த ஊருக்கு வந்தீர்கள் என்று..
**
நான் யார் என்று தெரியாமலே,,
அன்பு வார்த்தைகளோடு,,
உபசரித்த அந்த வெள்ளை ,,
உள்ளங்களை ,,
கடவுளாக பார்த்தேன்..
**
இந்த ஊருக்கு,,
புதிதாக மாற்றலாகி வந்த ,,
அரசு பணியாளர் என்று
கூறினேன்..
ஏதோ அவர்கள் வீட்டு பிள்ளை,,
போல என்னை நினைத்து,,
என்னை உபசரித்து,,.
விடிந்த பின்,,
எனக்கு அந்த கிராமத்தில்,,
தங்குவதற்கு,,
அனைத்து உதவியும் செய்தனர்..
**
அன்பு மழையில்,,
அன்றைய கிராமத்து மனிதர்களிடம்,,
தெரிந்த வெள்ளந்தி மனதை,
இன்றும்,,
இந்த அந்திம காலத்தில்,,
தன்னந்தனியே,,
உறவுகள் அற்ற நிலையில்,,
நினைத்து பார்க்கிறேன்..
கண்ணீரை தவிர,,
வேறு ஏதும் இல்லை.. என்னிடம்..
**
((அது ஒரு காலம்,,
ஐம்பது,, அறுபதுகளில்,,
நடந்த நிகழ்வுகளை,,
எப்போதோ யாரோ சொல்ல கேட்டதின்,,
நினைவு..
இந்த கற்பனை.. ))
**
இன்று ?? மனிதர்கள்.. ??
வெள்ளந்தி மனது ?? எங்கே ??
No comments:
Post a Comment