என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Thursday 21 June 2012

நான் நானாகி வருகிறேன்

என் உள்ளார்ந்த இயல்பை,,

தொலைத்து விட்டேன்..

நான் நானாக இல்லை,,

சில நாட்களாக..

ஆம் ஏனோ தெரியவில்லை,

நான் அல்லது என்னை சுற்றி,,

மகிழ்வாக இருப்பது போல உணர்வு,,

**
ஆனால்,,

நான் நிச்சயம் மகிழ்வானவன் இல்லை,,

அது எனக்கு தெரியும்..

சில சூழல்கள்,,

என் துக்கத்தை ,,

என் வேதனையை,,,

மறைத்து விட்டது போல உணர்வு..

**
சற்றே நிதானித்து,,

அந்த மகிழ்வுகளை விலக்கி விட்டு,,

பார்த்தேன்..

என் துக்கங்கள்,,

என் ரணங்கள்,,

என்னை பார்த்து கை கொட்டி சிரித்தன..

நாங்கள் இன்னும் உன்னோடுதான் என்று..

**
மீண்டும் ,,

மெல்ல,,

இப்போது,,

நான் நானாகி வருகிறேன்..

(இது முற்றிலும் உண்மையும் கூட )

No comments: