என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Tuesday 5 June 2012

மண் தின்றவன்

மண் தின்றவன்,,

மழலையில்..

மனம் விட்டு சிரித்தவன்,,

பள்ளியில்..

**
பொய் பேச தெரிந்தவன்,,

வீட்டில்,, ..

நட்பு கொள்ள தெரிந்தவன்,,

கல்லூரியில்.,,

**
பிடிப்போடு நின்றவன்,,

திருமணத்தில்...

புரிதலோடு இருந்தவன்,,

மனைவியிடத்தில்..

**
ஆழமான அன்போடு இருந்தவன்,,

பிள்ளைகளிடத்தில்..

மென் மேலும் உழைத்தவன்,,

நடுத்தர பருவத்தில்..

**
உண்மையே பேசியவன்,,

முதிர்ந்த வயதில்..

**
இறுதியில் செல்லாக்காசாகி,

தனிமையில் நின்றவன்,,

அந்திம பொழுதில்..

***
நான் ,,,

சராசரி மனிதன்,,,

***

No comments: