என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Friday 29 June 2012

அடர்ந்த கானகம்

***கால சக்கரத்தில் சில மணித்துளிகள்***

அடர்ந்த கானகம்,,

இருள் அப்பியிருந்த போதும்,,

இடையிடையே வெளிச்சம் பாய்ச்சின,,

கதிரவனின் ரேகைகள்..

**
அடர்ந்த புதரில்,,

வெகு எச்சரிக்கையாக,,

லாவகமாக அடி எடுத்து வைத்தும்,,

சட்டென்று சீரிய.

பெரும் சர்ப்பம் கண்டு,,

திடுக்கிட்டேன்,,

**
பின் சுதாரித்து,,

வெகு ஜாக்கிரதையாக,,

அதை லாவகமாக பிடித்து,,

தூர எறிந்தேன்,,

யாருமில்லை என்னுடன்,,

தனிமையை தவிர,,,

**
அந்தி சாய்வதற்குள்,,

இந்த வனத்தை விட்டு கிளம்பி விட வேண்டுமென்ற ,,

முனைப்பில்,,

தேடலை தொடர்ந்தேன்,,

**
ஆங்காங்கே விதவிதமான,,

சப்தங்கள் மட்டும் வந்து கொண்டு இருந்தது,...

ஏனோ,,

சரியாக திசை கணிக்க முடியவில்லை..

சற்று நிதானித்து,,

சலசலத்து ஓடிய ,,

நதிக்கரையில் ஓய்வெடுத்து,,

தேடலை தொடர்ந்தேன்,..

**
இந்த தேடல் வெகு விரைவில்,,

நினைத்தது போல ,,

முடிவுற்றால்தான்,,

நாளை எங்கள் ஊரில்,,

நடக்கும் விழாவிற்கு,,

அசைவ விருந்து தயார் செய்ய முடியும்.

**
வனத்தின்,,

பல்வேறு பகுதிகளில்,,

ஆளுக்கொரு திசையில் பிரிந்து,,

தேடி கொண்டிருக்கிறோம்,...

**
தேடல் தொடர்ந்த வினாடியில்,

அகப்பட்டது,,

நான் தேடிய விலங்கு..

மகிழ்வோடு,,

என் கூர் தீட்டிய,,

ஈட்டியை குறி பார்த்து,,

ஏறிய தயாரானேன்..

**
இது சரியாக,,

500 வருடங்களுக்கு முன்,,

குலதெய்வ திருவிழாவிற்காக,,

இந்த வேட்டையில் நான் (நாம் ) .,,

பங்கேற்றபோது...

No comments: