அடர்ந்த கானகம்
***கால சக்கரத்தில் சில மணித்துளிகள்***
அடர்ந்த கானகம்,,
இருள் அப்பியிருந்த போதும்,,
இடையிடையே வெளிச்சம் பாய்ச்சின,,
கதிரவனின் ரேகைகள்..
**
அடர்ந்த புதரில்,,
வெகு எச்சரிக்கையாக,,
லாவகமாக அடி எடுத்து வைத்தும்,,
சட்டென்று சீரிய.
பெரும் சர்ப்பம் கண்டு,,
திடுக்கிட்டேன்,,
**
பின் சுதாரித்து,,
வெகு ஜாக்கிரதையாக,,
அதை லாவகமாக பிடித்து,,
தூர எறிந்தேன்,,
யாருமில்லை என்னுடன்,,
தனிமையை தவிர,,,
**
அந்தி சாய்வதற்குள்,,
இந்த வனத்தை விட்டு கிளம்பி விட வேண்டுமென்ற ,,
முனைப்பில்,,
தேடலை தொடர்ந்தேன்,,
**
ஆங்காங்கே விதவிதமான,,
சப்தங்கள் மட்டும் வந்து கொண்டு இருந்தது,...
ஏனோ,,
சரியாக திசை கணிக்க முடியவில்லை..
சற்று நிதானித்து,,
சலசலத்து ஓடிய ,,
நதிக்கரையில் ஓய்வெடுத்து,,
தேடலை தொடர்ந்தேன்,..
**
இந்த தேடல் வெகு விரைவில்,,
நினைத்தது போல ,,
முடிவுற்றால்தான்,,
நாளை எங்கள் ஊரில்,,
நடக்கும் விழாவிற்கு,,
அசைவ விருந்து தயார் செய்ய முடியும்.
**
வனத்தின்,,
பல்வேறு பகுதிகளில்,,
ஆளுக்கொரு திசையில் பிரிந்து,,
தேடி கொண்டிருக்கிறோம்,...
**
தேடல் தொடர்ந்த வினாடியில்,
அகப்பட்டது,,
நான் தேடிய விலங்கு..
மகிழ்வோடு,,
என் கூர் தீட்டிய,,
ஈட்டியை குறி பார்த்து,,
ஏறிய தயாரானேன்..
**
இது சரியாக,,
500 வருடங்களுக்கு முன்,,
குலதெய்வ திருவிழாவிற்காக,,
இந்த வேட்டையில் நான் (நாம் ) .,,
பங்கேற்றபோது...
No comments:
Post a Comment