சான் பிரான்சிஸ்கோ
சான் பிரான்சிஸ்கோ..
என் கனவு நகரத்தில்..
ஒரு அந்தி சாயும் நேரத்தில்,
காலடி வைத்தேன்,,.
**
நேர்த்தியான,,
அந்த சாலைகள்,,
அழகிய கட்டிடங்கள்,,
மனதை ஈர்த்தன,,
சற்று நேரத்தில்,,
என் அறை கண்டு பிடித்து,,
உள்ளே நுழைந்தேன்,,
இருட்டியது..
**
வண்ண விளக்குகளால்,,
களை கட்டியது நகரம்,,
வியப்பு மேலிட,,
ரசித்தேன்,,
பூலோக சொர்க்கம் போல ..
இருந்தது அந்த நகரம்,,
**
நான்..
முதல் விமான பயணம் கண்டு,,
இங்கே வந்திறங்கிய,,
மென் பொருள் வல்லுநர்..
படித்ததும்,
இங்கே பெரும் நிறுவனம் ஒன்றில்,,
பெரும் சம்பளத்தில் வேலை..
**
எங்கெங்கும்,,
வண்ண விளக்குகள்,
கலவையான மனிதர்கள்...
ஒவ்வொரு கட்டிடமும் ,,
பிரமிப்பை ஏற்படுத்தின..
**
விடிந்தது,,
முதல் நாள்..
என் அலுவலகம் சென்றேன்,
எனக்குரிய வசதிகள் ,,
தரப்பட்டன ,,
**
முதல் நாள் வேலை முடிந்து ,,
திரும்பும்போது ,,
சொந்த உபயோகத்திற்காக,,
கொடுக்கப்பட்ட காரில் ,, ,
பிரயாணம் செய்து ,,
என் இருப்பிடம் வந்து,,
சேர்ந்தேன்,,
**
பிரமிப்பு இன்னமும் அகலாமல்,,
இருந்தபோது,,
யாரோ என் மீது,,
தண்ணீர் தெளித்ததை போல ,,
இருந்தது..
அம்மா..
**
இன்னும் என்ன தூக்கம்,..
இந்தா காபி தண்ணி குடிச்சுட்டு,,
காட்டுக்கு போயி,
அப்பாக்கு சாப்பாடு,,
கொடுத்துட்டு,,
அப்பாக்கு ஒத்தாசையா இருந்துட்டு,,
சீக்கிரம் வந்து புறப்பட்டு,,
பள்ளிக்கூடம் போ என்றாள்..
**
கனவு கலைந்தது,,
எனக்கு,,.
நான் விழித்தேன் சில வினாடி ,,
கனவு புரிந்தது..
அம்மா சொன்ன வேலைகளை ,,
முடித்து விட்டு ,,
என் மிதிவண்டியை மிதித்தேன்,,
**
வேகமாக மிதித்தால்,, .
அரை மணி நேரம் ஆகும்,,
எங்கள் கிராமத்திலிருந்து,,
பள்ளிக்கூடம் சென்று சேர..
**
பள்ளியை நோக்கி..
கனவுகள் நிஜமாக்க ,,
வேகமாக மிதித்து கொண்டு இருந்தேன்,,
என் மிதிவண்டியை..
**
நான்..
அரசு பள்ளியில்,,
பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் ..
No comments:
Post a Comment