வரலாறு..
மகேந்திரவர்ம பல்லவரையும்,,
ராஜராஜ சோழனையும்,,
சந்தித்து வந்த பிறகு,,
வரலாறு பற்றிய தெளிவு வந்தது,,
**
வரும் காலத்திற்கு,,
அழகிய வரலாற்றை படைக்க,,
அவர்கள் மேற்கொண்டு வரும்,
முயற்சிகள் மகிழ்வோடு,,
பிரமிப்பை கொடுத்தது..
**
அந்த வரலாற்றை,,
இன்றுள்ள ஆள்வோரிடம் ,,
கொண்டு செல்லலாம் என்றெண்ணி,
அவர்களிடம் தெரிந்து வந்ததை ,,
உரைத்தேன்,,.
ஏளன பார்வை,,
பரிசாக கிடைத்தது..
**
ஏதோ பன்னாட்டு நிறுவன,,
தொடக்க விழாவிற்கான,,
வரவேற்ப்பு கொடுக்க,,
பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தார்கள்..
**
நான்
சலனமற்று நின்றிருந்தேன்,.
No comments:
Post a Comment