என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Tuesday 19 June 2012

வரலாறு..

மகேந்திரவர்ம பல்லவரையும்,,

ராஜராஜ சோழனையும்,,

சந்தித்து வந்த பிறகு,,

வரலாறு பற்றிய தெளிவு வந்தது,,

**
வரும் காலத்திற்கு,,

அழகிய வரலாற்றை படைக்க,,

அவர்கள் மேற்கொண்டு வரும்,

முயற்சிகள் மகிழ்வோடு,,

பிரமிப்பை கொடுத்தது..

**
அந்த வரலாற்றை,,

இன்றுள்ள ஆள்வோரிடம் ,,

கொண்டு செல்லலாம் என்றெண்ணி,

அவர்களிடம் தெரிந்து வந்ததை ,,

உரைத்தேன்,,.

ஏளன பார்வை,,

பரிசாக கிடைத்தது..

**
ஏதோ பன்னாட்டு நிறுவன,,

தொடக்க விழாவிற்கான,,

வரவேற்ப்பு கொடுக்க,,

பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தார்கள்..

**
நான்

சலனமற்று நின்றிருந்தேன்,.

No comments: