என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Friday 1 June 2012

தூசிகள்

அதிகாலை கனவிலிருந்து,,

விடுபட்டேன்,,

குழப்பம் நிறைந்த,,

வரைமுறையற்ற  கனவுகள் இன்று,

இன்றல்ல,,

சமீபமாய் என் கனவுகள்,

இப்படித்தான் ஒரு ஒழுங்கற்று,.,

ஆழ்மனதை ,

துடைத்து பார்த்தேன்..

தூசிகள் படர்ந்திருந்தது..

சுத்தம் செய்ய முடிவு செய்து,,

சுத்தம் செய்ய துவங்கினேன்..

தூசிகளின் கடும்,,

ஆக்கிரமிப்பு புரிந்தது..

வெகு நேரம் போராடியும்,,

படர்ந்திருந்த  தூசிகளை,,

அகற்ற முடியவில்லை..

இப்பொழுது,,

இறைவனை அழைக்கின்றேன்,,

உதவிக்கு..

வருவார் என்ற நம்பிக்கையில்..

காத்திருக்கிறேன்,,

இந்த நொடி வரை.. 

 



** நிகழ்வுகள்.. பெரும் பாரமாய்..வாழ்வியல் ***

No comments: