உதிரம் சிந்தாமலே..
வலிகள் மிகுந்து,,
வீழ்ந்தவன் நான்..
எழுவதற்கு துணிவின்றி,,
வலிகளின் உக்கிரத்தில்,
கிடந்தவனை பார்த்து ,,
சிரித்தார் கடவுள்..
அவனின் சிரிப்பை பார்த்ததும்,,
எனக்குள் வந்த கோபம்,,
என்னை வீறு கொண்டு எழ வைத்தது..
அவன் இப்போது இன்னும் அதிக சப்தத்தோடு,,
சிரிக்கிறான்,,
நான் வெறியோடு போராட ,,
தயாராகிவிட்டேன்,,
No comments:
Post a Comment