என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Friday 25 May 2012

வாரிசுகள்

பெரும் தொழில் செய்கிறார்கள்,,

பெரும் முதலீடு செய்கிறார்கள்,,

பெரும் பெரும் தொழில்களெல்லாம்,

குறுகிய காலத்தில் ஆரம்பிக்கிறார்கள்,

இருபத்தைந்து வயதிலேயே..,,

பெரும் தொழிலதிபர்கள்,,

என்ற பெயர்...

வாழ்க்கை அப்படி..

அவர்களுக்கு,,

**
இங்கே,,

படித்து முடித்து,,

வேலை செய்து,,

தொழில் கற்று,

தொழில் துவங்கி,

படாத பாடு பட்டு,,

சற்றே ஒரு நிமிர்ந்த நிலை,,

வருவதற்குள்,

நரை தட்டி,,

இளமை தீர்ந்துவிடுகிறது..

**
அவர்கள்.. வாரிசுகள்,,

அரசியல்வாதிகளுக்கு,

இவர்கள்.. வாரிசுகள்,,

பாமரர்களுக்கு..

No comments: