******
வழிந்த வியர்வையை,,
கசங்கிய துண்டால் ,,
ஒற்றி எடுத்து,
மண்வெட்டியை ஓரமாய் வைத்து,,
நாள் முழுதும் உழைத்த,
களைப்பு நீங்க,,
தேநீர் கடையில்,
தேநீர் பருகுகிறான்,,
உள்ளம் மகிழ்வாக,,
அந்த தொழிலாளி ..
*****
என் கவிதைகளில்,,
அழகு மிளிர,,
அவளின் இதயம்,,
காண்கிறேன்,,
****
நான் மனதோடு,,
பேசிய பின்,,
தெளிவடைந்த உள்ளம்,,
சொல்லியது,,
காதலே நீ போ என்று..
***
கவனம் சிதறி,,
வீழ்ந்தேன் ,,
கல்லறையில்,,
உறக்கம் கெட்டு அலைகிறது ஆன்மா..
****
இறந்தேன்
அன்னை பூமியில்,,
நிம்மதி கொண்டேன்,,
அதனால் என் கல்லறையில் ,..
***
காமம் அதிகம் கொண்டு,
போதையில் மிதக்க துவங்கும் போது,,
பெரும் சாம்ராஜ்யத்தின் ,,
வீழ்ச்சி துவங்குகிறது...
****
நிசப்தம் நிறைந்த இரவுகளை,,
தினந்தோறும்,,
தேடி கொண்டிருக்கிறேன்...
தேடல் தொடர்கிறது,,
நகர காட்டில்..
No comments:
Post a Comment