என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Friday 25 May 2012

.. சிறு துளிகள்..

******
வழிந்த வியர்வையை,,

கசங்கிய துண்டால் ,,

ஒற்றி எடுத்து,

மண்வெட்டியை ஓரமாய் வைத்து,,

நாள் முழுதும் உழைத்த,

களைப்பு நீங்க,,

தேநீர் கடையில்,

தேநீர் பருகுகிறான்,,

உள்ளம் மகிழ்வாக,,

அந்த தொழிலாளி ..
*****
என் கவிதைகளில்,,

அழகு மிளிர,,

அவளின் இதயம்,,

காண்கிறேன்,,
****
நான் மனதோடு,,

பேசிய பின்,,

தெளிவடைந்த உள்ளம்,,

சொல்லியது,,

காதலே நீ போ என்று..
***
கவனம் சிதறி,,

வீழ்ந்தேன் ,,

கல்லறையில்,,

உறக்கம் கெட்டு அலைகிறது ஆன்மா..
****
இறந்தேன்

அன்னை பூமியில்,,

நிம்மதி கொண்டேன்,,

அதனால் என் கல்லறையில் ,..
***
காமம் அதிகம் கொண்டு,

போதையில் மிதக்க துவங்கும் போது,,

பெரும் சாம்ராஜ்யத்தின் ,,

வீழ்ச்சி துவங்குகிறது...
**** 
நிசப்தம் நிறைந்த இரவுகளை,,

தினந்தோறும்,,

தேடி கொண்டிருக்கிறேன்...

தேடல் தொடர்கிறது,,

நகர காட்டில்..
 
 
 
 
 
 
 

No comments: