கலைந்தது நித்திரை
கரை புரண்டோடும் ,,
நதி வெள்ளம்...
இருபுறமும்,
அழகிய நாட்டிய வனப்பில்,,
தென்னை மரங்கள்..
தென்னை மரங்களை தாண்டி,,
காணும் இடமெல்லாம்,
மலர் சோலைகள்..
**
நெஞ்சம் நிறைய மகிழ்வோடு,,
உடலில் ஒட்டி இருந்த,,
ஆற்றங்கரை மணலை தட்டி விட்டு,,
தென்னையை தாண்டி,,
மலர் வனத்தினுள் புகுந்தேன்..
காற்றில் கலந்த அந்த ,,
நறுமணங்கள்,,
மனதை மயக்கி,,
என்னை,,
வேறு எங்கோ கொண்டு சென்றன..
**
மலர்களை தாண்டிய போது,,
கண்கள் அகல விரிந்தன வியப்பில்,
பச்சை கம்பளம் விரித்தது போன்ற,,
அழகிய வயல்வெளிகள்..
**
எனை மறந்து,,,
சற்று இன்னும் முன்னோக்கி நகர்கையில்,,
அழகிய பாட்டு சப்தங்கள்.
வயல்வெளிகளிடையே,,
வேலை செய்யும் பெண்களின்,,
பாடல்கள் அவை.
சற்றே வித்தியாசமாக ஒலித்த,,
பழைய தமிழ் பாடல் வரிகளை,,
கேட்டு,,
வியப்பில் மேலும் சென்றபோது,,
மெல்லிய சிரிப்பு சப்தங்கள்..
**
நிதானித்து கண்டபோது,,
பரவசமடைந்தது உள்ளம்,,
அழகிய வயல்வேளியிடையே,,
அழகிய குளம்,,
குளக்கரையில்,,
அந்த காலை வேலையில்,,
ஆடவர் ஒரு புறம்,,
பெண்டிர் ஒரு புறம் என,,
நீராடி கொண்டு இருந்தனர்..
**
சற்றே நிதானித்து,,
யோசித்த பொது,,
முதலில்,,
வெள்ளம் புரண்டோடும் ஆறு,,
பிறகு அழகிய ஆற்றங்கரை,,
வனப்பு மிகு தென்னை மரங்கள்,,
பிறகு,,
மணம் வீசி மனம் பேசிய மலர் வனம்,,
பிறகு,
அழகிய வயல்வெளிகள்,,
அதில் வேலை செய்யும் பெண்டிரின் ,,
அழகிய பாடல்கள்..
பிறகு தெரிந்த குளம்,,
குளக்கரை...
**
ஒன்று நிதர்சனமாய் புரிந்தது,,
இறைவன் குடி கொண்ட இடம் ,,
இதுதான் என்று..
**
புரிந்த வினாடியில்,,
கலைந்தது நித்திரை.. ....
No comments:
Post a Comment