என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Thursday 31 May 2012

தலை கவிழ்ந்து,

தலை கவிழ்ந்து,,

தவிப்போடு நிற்கும்,,

மாதம் துவக்கம்,...

பெற்றவர்களுக்கு..

**
புதிய வகுப்பிற்கு செல்ல போகும்,

குழந்தைகளை நினைத்து மகிழ்வு,,

அதே சமயம்,,

கல்வி கட்டணங்கள்,

நினைத்து கலக்கம்..

சுமையோடு சுமையாக,,

அரசாங்கத்தின்,

பெட்ரோல் விலை உயர்வு பரிசு வேறு ..

**
ஆள்வோர்கள் எல்லாம் ,,

பெரும் வசதியாக இருந்தால்,,

பாமரனின் வலி எங்கே ,,

உறைக்க போகிறது.

**
அன்று சாமானியனாக இருந்ததால்தான்,,

காமராஜர் மதிய உணவு திட்டம் கொண்டு வந்தார்,.

இன்று பெரும் தனவந்தர்களாக இருப்பதால்,,

கல்வி கட்டணங்கள்,,

சாமானியனுக்கு ,

எட்டாத உயரத்தில் இருக்கிறது..

**

No comments: