நெருக்கியடித்து,
வரிசையில்,
நின்றேன்..
**
மெல்ல ஊர்ந்தது,,
வரிசை..
அதிகாலை வந்தது,,
நண்பகல் ஆகிவிட்டது.
**
சட்டென்று ஒரு பரபரப்பு,,
கோவில் அதிகாரிகள் எல்லாம்,,
ஓடோடி வந்தனர்..
அந்த பெரிய காரில்,,
இறங்கிய,
ஒரு பெரும் செல்வாக்கான ,
மனிதருக்கு,
அப்படி ஒரு வரவேற்ப்பு..
**
சில நிமிடங்களில்,,
அவர் தரிசனம் முடித்து,,
கிளம்பிவிட்டார்..
**
நான்,,
இன்னும் வரிசையில்..
இன்னும் மூன்று மணி நேரம் ஆகுமாம்..
கடவுளை தரிசிக்க..
No comments:
Post a Comment