என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Friday 25 May 2012

தரிசனம்

நெருக்கியடித்து,

வரிசையில்,

நின்றேன்..

**
மெல்ல ஊர்ந்தது,,

வரிசை..

அதிகாலை வந்தது,,

நண்பகல் ஆகிவிட்டது.

**
சட்டென்று ஒரு பரபரப்பு,,

கோவில் அதிகாரிகள் எல்லாம்,,

ஓடோடி வந்தனர்..

அந்த பெரிய காரில்,,

இறங்கிய,

ஒரு பெரும் செல்வாக்கான ,

மனிதருக்கு,

அப்படி ஒரு வரவேற்ப்பு..

**
சில நிமிடங்களில்,,

அவர் தரிசனம் முடித்து,,

கிளம்பிவிட்டார்..

**
நான்,,

இன்னும் வரிசையில்..

இன்னும் மூன்று மணி நேரம் ஆகுமாம்..

கடவுளை தரிசிக்க..

No comments: