என்னுள்ளே
என்னுள்ளே,,
ஓராயிரம் கனவுகள்,,
கனவுகள் உன்னை சுற்றியே,,
உன் நினைவுகளை மட்டும்,,
வசப்படுத்தி கொண்ட என் கனவுகள்,
வேறு நினைவுகளை ஏற்க மறுக்கிறது,,
காதல் பூத்த தருணத்தில் இருந்து,,
காதலை கொண்டாடிய தருணம் வரை,,
அழகிய கனவுகளோடு,,
உற்சாகமாக,,
உயர பறந்து கொண்டு இருந்தேன்,,
காதல் ,,
அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்த போது,,
திருமண கனவுகள் எட்டி பார்த்த நேரம்,,
அழகாக உனக்கு வலிக்காமல்,,
பிரிவை சொல்லி சென்று விட்டாய்,,
நான் விக்கித்து நின்றேன்..
பிறகு,,
பக்குவம் அடைந்தேன் மெல்ல..
இப்போதும் ,,
என் கனவுகள் உன்னை சுற்றிதான்..
உன் பிரிவு விநாடிகளை சுற்றி,,
தினமும்,,
உன்னோடு,, உயிர்ப்போடு,,
உன் நினைவுகளோடு ,,,
காதலை மறக்காத என் கனவுகள்,,
வலிகளோடு,,
தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன...
***
காதலின் பிரிவு,,,,
மென் சோக நினைவுகளின் சங்கமம்..
****
No comments:
Post a Comment