என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Friday 25 May 2012

களங்கம்

என் மீது களங்கம் ,,

கற்பித்து ,,

சந்தேக தணலில் சிக்கி ,,

இன்று வரை,,

உன் நிம்மதி தொலைத்த ,,

நண்பனே.!!!

இனி அடுத்து என்னை எரிக்க,,

என்ன செய்ய போகிறாய்..?

**
இன்னும் எத்தனை காலம்,,

என் அமைதியை கெடுத்து,,

மனதுக்குள் ஆவேசம் கொண்டு,,

உன் நிம்மதியை கெடுக்க போகிறாய்..?

**
நான் வேதனை படினும்,,

வழக்கமான அமைதியுடன்,,

என்றென்றும் கடவுளின் துணையோடு,,

வாழ்கிறேன்..

No comments: