என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Saturday 5 May 2012

பழந்தமிழர் உறுதி

சிதிலமடைந்த ,,

அந்த பழங்கால கற்கோட்டையை,,

வேதனை பொங்க பார்த்தேன்..

**
அருகில் சென்று ,,

அதன் வலியை உணர முற்பட்டபோது,,

காலம் பல கடந்து,,

இயற்கை தடைகளை தாண்டி,,

மிச்சம் இருக்கிற அந்த கற்களில்,,

இன்னும் அந்த பழந்தமிழர்,,

வீரத்தின் உறுதி தெரிந்தது..

அவர்களின் கலாசாரம் தெரிந்தது..

**
மிச்சம் உள்ள அந்த உறுதியான,,

கோட்டையில் உள்ள கற்கள் ,,

சொன்ன சேதி இதுதான்,,

மனிதர்கள் சென்று விடுவார்கள்..

நாங்கள் இருப்போம் என்றென்றும்,,

**
ஏனென்றால்,,

நாங்கள்,,

வீரம் செறிந்த,,

உன்னத அறத்தை போற்றிய,,

நீதி தவறாமல்,,

உயர்ந்த நெறிகளோடு வாழ்ந்த,,

மகத்தான பழந்தமிழ் மன்னர்களால்,,

பழந்தமிழ் உழைப்பாளர்களால்,,

கட்டப்பட்டோம்,,

அதனால்தான் இன்றும் உயர்ந்து நிற்கிறோம் என்றது,,

************
(எனக்குள் ஏனோ இன்று,,

இந்த புதிதாய் கட்டும் அடுக்கு மாடிகள் சரிந்து விழும் செய்திகள்

நினைவிற்கு வந்தது,,)

No comments: