அகம் மௌனமற்று
கனவுகளில் சங்கமிக்க,,
உறக்கம் ஒத்துழைக்க மறுக்கும்,,
முன்னிரவு நேரம்..
**
மனதோரம்,,
தெளிவற்ற என்ன அலைகள்,,
குறுக்கும் நெடுக்குமாய்,,
வரைமுறையற்று,,
அலைபாய்கின்றன...
**
அழகிய கனவுகளுக்கு,,
மனதளவில் தயாராகும் நேரம்,,
நிஜங்களின் அதிர்வுகளால்,,
அலைபாய்தல் தொடர்கிறது...
உறக்கம் என்னை தழுவ மறுக்கிறது..
**
சிரமப்பட்டு,, சிந்தனை செய்ததில்,,
மௌனம் ஒன்றே தீர்வு போல் ,,
தோன்றினாலும்,,
புறம் மட்டுமே மௌனமாய்,,
அகம் மௌனமற்று,,
செயலற்று,,
தனிமை சூழலில்.... தவிப்போடு..
No comments:
Post a Comment