என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Friday 11 May 2012

அகம் மௌனமற்று

கனவுகளில் சங்கமிக்க,,

உறக்கம் ஒத்துழைக்க மறுக்கும்,,

முன்னிரவு நேரம்..

**
மனதோரம்,,

தெளிவற்ற என்ன அலைகள்,,

குறுக்கும் நெடுக்குமாய்,,

வரைமுறையற்று,,

அலைபாய்கின்றன...

**
அழகிய கனவுகளுக்கு,,

மனதளவில் தயாராகும் நேரம்,,

நிஜங்களின் அதிர்வுகளால்,,

அலைபாய்தல் தொடர்கிறது...

உறக்கம் என்னை தழுவ மறுக்கிறது..

**
சிரமப்பட்டு,, சிந்தனை செய்ததில்,,

மௌனம் ஒன்றே தீர்வு போல் ,,

தோன்றினாலும்,,

புறம் மட்டுமே மௌனமாய்,,

அகம் மௌனமற்று,,

செயலற்று,,

தனிமை சூழலில்.... தவிப்போடு..

No comments: