என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Friday 11 May 2012

தாகம் நிறைந்த வனத்திற்குள்

தாகம் நிறைந்த வனத்திற்குள்..

மெல்லிய நீர்த்துளி போல் உன் வரவு,,

மெல்லிய நீர்த்துளி,,

மெல்ல வலுபெற்று,,

அழகிய சாரலாய்,,

என் மீது தெறித்த போது,,

பறவையும் நானும் ஒன்று என்பதுபோல உணர்ந்தேன்..

**
மெல்ல உயர உயர செல்ல செல்ல,,

தன்னிலை மறந்து,,

உற்சாகம் பிறந்து,,

உன்னிலும் அழகிய வனப்பு மிகுந்த ,,

மேகங்களை ரசித்தபோது,,

எனக்குள் நீ விலக தொடங்கியதை,,

நான் அறிந்திருக்க வில்லை..

**
சட்டென்று,,

என் ஒற்றை சிறகு ,,

அறுந்து விழுந்த போதுதான்,,

புரிந்தது,, உன் பிரிவு,,

**
தன்னிலை மறந்த என்னை,,,

இன்று,,

தனிமை வாட்டுகிறதே..

**
எங்கிருக்கிறாய்,, என் தேவதையே,,

உன்னை மீண்டும் காண,, ஆவலோடு,,

திருந்திய உள்ளத்தோடு,,

தவிப்போடு,,

தனிமையில் நான்,,

No comments: