தாகம் நிறைந்த வனத்திற்குள்..
மெல்லிய நீர்த்துளி போல் உன் வரவு,,
மெல்லிய நீர்த்துளி,,
மெல்ல வலுபெற்று,,
அழகிய சாரலாய்,,
என் மீது தெறித்த போது,,
பறவையும் நானும் ஒன்று என்பதுபோல உணர்ந்தேன்..
**
மெல்ல உயர உயர செல்ல செல்ல,,
தன்னிலை மறந்து,,
உற்சாகம் பிறந்து,,
உன்னிலும் அழகிய வனப்பு மிகுந்த ,,
மேகங்களை ரசித்தபோது,,
எனக்குள் நீ விலக தொடங்கியதை,,
நான் அறிந்திருக்க வில்லை..
**
சட்டென்று,,
என் ஒற்றை சிறகு ,,
அறுந்து விழுந்த போதுதான்,,
புரிந்தது,, உன் பிரிவு,,
**
தன்னிலை மறந்த என்னை,,,
இன்று,,
தனிமை வாட்டுகிறதே..
**
எங்கிருக்கிறாய்,, என் தேவதையே,,
உன்னை மீண்டும் காண,, ஆவலோடு,,
திருந்திய உள்ளத்தோடு,,
தவிப்போடு,,
தனிமையில் நான்,,
No comments:
Post a Comment