என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Saturday 26 May 2012

அதிகாலை வானம்

சற்றே சில்லிட்டிருந்த,,

உடலில்,,

மெலிதாக வெப்பம் ஏறியபோது,,

கதிரவனின் வருகையை,

உணர்ந்தேன்..

**
சோம்பலை உதறி,,

ஆகாயம் பார்த்தேன்,,

**
அதிகாலை வானம்,,

வண்ணமயமாக ,

கதிரவனின் உதவியால்,,

வெகு அழகாக,,

மின்னியது..

இறைவனின் ரசனை,,

என்றுமே வியப்பிற்குரியது,,,

**
மெல்ல ஒளியை ,

என் மீது படர விட்ட,,

கதிரவன்,,

எனக்குள் புத்துணர்ச்சி,,

பாய்ச்சினான்..

**
இறைவனின் ஆசிகளை,,

கதிரவன் பெற்று,,

எனக்கு வழங்குவது போன்ற ,,

அழகிய உணர்வு அது..

**
முழுதாக விடிந்த பொழுது,,

என் கடமைகளில்,

முழ்கி இருந்தேன்...

No comments: