அதிகாலை வானம்
சற்றே சில்லிட்டிருந்த,,
உடலில்,,
மெலிதாக வெப்பம் ஏறியபோது,,
கதிரவனின் வருகையை,
உணர்ந்தேன்..
**
சோம்பலை உதறி,,
ஆகாயம் பார்த்தேன்,,
**
அதிகாலை வானம்,,
வண்ணமயமாக ,
கதிரவனின் உதவியால்,,
வெகு அழகாக,,
மின்னியது..
இறைவனின் ரசனை,,
என்றுமே வியப்பிற்குரியது,,,
**
மெல்ல ஒளியை ,
என் மீது படர விட்ட,,
கதிரவன்,,
எனக்குள் புத்துணர்ச்சி,,
பாய்ச்சினான்..
**
இறைவனின் ஆசிகளை,,
கதிரவன் பெற்று,,
எனக்கு வழங்குவது போன்ற ,,
அழகிய உணர்வு அது..
**
முழுதாக விடிந்த பொழுது,,
என் கடமைகளில்,
முழ்கி இருந்தேன்...
No comments:
Post a Comment