சற்றே சிரமப்பட்டு,
முட்களும், சிறு கற்களும்,
நிறைந்த பாதையில்,,
பயணித்தேன்..
சுட்டெரிக்கும் வெயில் வேறு..
**
காலணிகள் பிய்ந்து,,
வெற்று காலுடன்,
நடந்து கொண்டு இருந்தேன்..
**
குருதி வழியும் கால்களுடன்,,
வியர்வை வழியும் உடலுடன்,,
பயணித்தேன்,,
சரியான திசை நோக்கி..
**
வெகு நேரத்திற்கு,,
பின்,,
கண்ணுக்கு குளிர்ச்சியாக,,
அழகிய சிறு குன்றும்,
அதில்,,
அழகிய மலர்கள் நிறைந்த,
பச்சை புல்வெளி பாதையும்,
எனக்காக காத்து நின்றன..
**
வாழ்வியல்.. சற்றே சிரமத்துடன்,, பொலிவை தேடி..
**
No comments:
Post a Comment