என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Friday 25 May 2012

பொலிவை தேடி

சற்றே சிரமப்பட்டு,

முட்களும், சிறு கற்களும்,

நிறைந்த பாதையில்,,

பயணித்தேன்..

சுட்டெரிக்கும் வெயில் வேறு..

**
காலணிகள் பிய்ந்து,,

வெற்று காலுடன்,

நடந்து கொண்டு இருந்தேன்..

**
குருதி வழியும் கால்களுடன்,,

வியர்வை வழியும் உடலுடன்,,

பயணித்தேன்,,

சரியான திசை நோக்கி..

**
வெகு நேரத்திற்கு,,

பின்,,

கண்ணுக்கு குளிர்ச்சியாக,,

அழகிய சிறு குன்றும்,

அதில்,,

அழகிய மலர்கள் நிறைந்த,

பச்சை புல்வெளி பாதையும்,

எனக்காக காத்து நின்றன..

**
வாழ்வியல்.. சற்றே சிரமத்துடன்,, பொலிவை தேடி..

**

No comments: