என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Friday 25 May 2012

ஜெய் ஹிந்த்..

அதிக உழைப்பை கொட்டி,

நம் தேவைக்கும் அதிகமாகவே,,

விவசாயிகள் உற்பத்தி செய்த,,

தானியங்களை,

சேமித்து வைக்க,,

வசதி இல்லையாம் அரசுக்கு..

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி,,

செய்வதிலும் சிக்கல்களாம்..

**
ஆக,,

படித்த மேதாவிகள்,,

ஆட்சி செய்கிறார்கள்..

**
உழைப்பை கொட்ட மக்கள் தயாராக இருக்க,,

நிர்வாகம் செய்ய திறமை அற்றவர்கள்

இருந்தால்,,

இப்படித்தான் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடையும்,,

தினசரி ஊழல் செய்திகள் வரும்..

**
பிறகு,,

அப்பாவி மக்கள் தலையில்,,

எரிபொருள் விலையிலிருந்து,,

எல்லா விலையையும் உயர்த்தி,,

திண்டாட வைப்பார்கள்..

**
இதில் ஊழல் செய்தவர்கள்,

ஏற்கனவே பத்து தலைமுறைக்கும்,,

சொத்து சேர்த்து குவித்தாயிற்று..

அவர்களுக்கு கவலை இல்லை,,..

ஆனால்..

நமக்கு.. ??

**
சுதந்திரம்..

வெள்ளையனின் பிடியில் இருந்து தப்பித்து,,

கொள்ளையர்களின் பிடியில் சிக்கி இருக்கிறோம்.

**
எப்படி இருப்பினும்,,

இது நம் தேசம்,,

நாம் விரும்பும் தேசம்..

ஜெய் ஹிந்த்..

No comments: