என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Saturday 19 May 2012

வாழ்வியல்.. வெப்பம்..

எங்கும் காய்ந்து போன,,.

ஒரு வறண்ட  பிரதேசத்தில்,,

நண்பகல் அனலில்,,

மனித வாடையே இல்லாத,,

அந்த பகுதியில்,,

திக்கு தெரியாமல் மாட்டி கொண்டேன்..

எப்படி இங்கு வந்தேன் ,,

என தெரியவில்லை..

**
கடும் வெப்பம்,,

கடும் சூட்டில் அலறும் கால்கள்..

வியர்வை கூட ,,

ஆவியாக வெளியேறும்  பூமி அது,.,

மனமும்,,

உடலும்,,

சோர்ந்து ,,

ஆவேசம் கொண்டு,,

அமைதியாக இருந்தன வேறு வழியின்றி..

**
பாதை தேடி ,,

சிரமத்தோடு பயணித்ததில்,,

சற்றே வெகு நேரம் ஆனது..

மெல்ல இருட்டியபோது,,

பயம் மெல்ல மனதை கவ்வியது,,

சோர்வுற்ற உடல்,,

தள்ளாடி விழுந்தபோது,,

ஏதும் புரியவில்லை சில நேரம்..

**
கண் விழித்தபோது,,

இரவு தீர்ந்து,,

சூரியனின் வருகையால்,

அந்த வனாந்திரம் ,,

மீண்டும் சூடாகி கொண்டு இருந்தது..

**
மற்றுமொரு தேடலுக்கு,,

மெல்ல எழுந்தேன்,,,

**
சூழல்.. வாழ்வியல்.. வெப்பம்..

**



No comments: