அம்மா,.,,
நமக்கே நமக்காக,,
நம்மை மட்டுமே,, நினைத்து
வாழும் ஒரே ஜீவன்,,
அம்மா..
கோபம் கொண்டாலும்,,
அதட்டினாலும்,,
நம் வாடிய முகம் கண்டதும்,,
அழும் ஒரே ஜீவன்,,
அம்மா..
உலக பிரயாணத்தின்,,
முதல் நம்பிக்கை,,
அம்மா..
வாடி நின்ற போதெல்லாம்,,
ஆறுதல் தந்த அன்பு மனம் கொண்டவள்.
தந்தை என்ற வாழும் தெய்வத்திடம்,,
நமக்காக சண்டை போடும்போது,,
அவளுக்கென்று ஏதும் இல்லை,,
பிள்ளைகள் நலனே அவள் எண்ணம்,,
என்ற உயர்வான குணமே தெரியும்.
வாழும் வரை,,
அவள் அரவணைப்பில்,, வாழ்ந்துவிட்டு,,
காதல் என்ற பெயரில்,
அவளை உதாசீனபடுத்தி செல்பவர்களும்,
கடைசி காலத்தில்,,
தனிமை சிறையான,,
முதியோர் இல்லத்தில் விடுபவர்களும்,,
அரக்க குணம் உடையவர்களே..
No comments:
Post a Comment