என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Friday 25 May 2012

தொடர்ந்த விடியல்

மெல்லிதாய் வெப்பம் பரவ,,

கண் விழித்தேன்.

விடிந்திருந்தது..

**
உடலை சுற்றிய குளிர் ,

விலகி,,

வெப்பம் பரவி கொண்டிருந்தது..

**
போர்வையை விலக்கி,,

வானம் பார்த்தேன்..

வெகு அழகான ,,

வண்ண தீற்றல்களில்,,

வானம்,,

கதிரவனின் உதவியோடு..

**
போர்வையோடு,,

சோர்வையும் உதறி,,,

காலை கடமைகள் முடித்து,,

அந்த அடர்ந்த வனாந்தரத்தில்,,

நடக்க துவங்கினேன்...

**
இது,,

தினசரி தொடரும் நிகழ்வு..

**
வாழ்க்கை.. தொடர்ந்த விடியல்..
**

No comments: