தொடர்ந்த விடியல்
மெல்லிதாய் வெப்பம் பரவ,,
கண் விழித்தேன்.
விடிந்திருந்தது..
**
உடலை சுற்றிய குளிர் ,
விலகி,,
வெப்பம் பரவி கொண்டிருந்தது..
**
போர்வையை விலக்கி,,
வானம் பார்த்தேன்..
வெகு அழகான ,,
வண்ண தீற்றல்களில்,,
வானம்,,
கதிரவனின் உதவியோடு..
**
போர்வையோடு,,
சோர்வையும் உதறி,,,
காலை கடமைகள் முடித்து,,
அந்த அடர்ந்த வனாந்தரத்தில்,,
நடக்க துவங்கினேன்...
**
இது,,
தினசரி தொடரும் நிகழ்வு..
**
வாழ்க்கை.. தொடர்ந்த விடியல்..
**
No comments:
Post a Comment