என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Friday 11 May 2012

மௌனம்

மௌனம் கூட,,

நீண்ட நாள்,,

என் ஆயுதமாக இருந்தது,,

என் இயலாமையினால்.....

அவ்வப்போது அந்த மௌனம்,

அந்த துன்பியல் சூழலை,,

அமைதி கொள்ளவும் வைத்தது..

**
இருப்பினும்,,

அந்த துர்நிகழ்வுகளை,,

சமாளிக்க இயலாமல்,,

தனித்து நின்று,,,,

மௌனம் என்ற ஆயுதத்தால்,,

எதிர்கொண்டபோது,,,

உண்டான ரணம்,,

இன்னமும் மனதோரம்,,

அழுந்துகிறது,,

மனதை பிசைகிறது..

**
மருந்தாக,,

கண்ணீரை தவிர ,,

ஏதுமில்லை என்னிடம்...

No comments: