என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Friday 25 May 2012

சற்று நிதானித்தேன்,,

என் வாழ்வியலில் இருந்து,,

என் சூழலில் இருந்து,,

என் எண்ணங்களில் இருந்து,,
என் கனவுகளில் இருந்து,,
என் மனிதங்களில் இருந்து,,
நிதானித்து,,
சிறிய முற்றுப்புள்ளி வைத்தேன்..
***
சில குழப்பங்கள்,,
ரணங்கள்,,
ஏமாற்றங்கள்..
ஏக்கங்களை ,,
கடந்து,,
இளமை தீர்த்து,,
இன்னும் சில வருடங்களில்,
நடுத்தர பருவத்தை எட்டி பிடிக்கும்,,
முன்,,
நினைவுகளை,, சிறிது,,
பின்னோக்கி அசை போட்டதில்..
தவறுகள் நிறைய புரிந்தது..
செல்லாக்காசாகி நின்ற கோலம் புரிந்தது...
**
சற்றே நேர்மையும்,,
சிறிது இரக்கமும்,,
சிறிது விட்டு கொடுத்தலும்,,,
சிறிய சோம்பலும்,
என்னை படு குழியில் தள்ளிவிட்ட,,
நிலையை எண்ணி பார்க்கிறேன்..
பதிலாக பெருமூச்சை தவிர,,
வேறு எதுவும் இல்லை..
என்னிடம்,,
இனி இழப்பதற்கு ஒன்றும் இல்லை..
***
மீண்டும் நிதானத்திற்கு விடை கொடுத்த வினாடியில்..
சட்டென்று நிதானித்தேன்..
***
மனது சொல்கிறது மௌனமாக,,
எனக்குள்,,,
இனி வீழ்வதற்கு எதுவும் இல்லை..
இனி தெளிவோடு,,
உறுதியோடு,,
போராடி,,
வானம் வசப்படும் நாள்,,
வெகு தூரம் இல்லை ,,
என்றது....
.

No comments: