என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Saturday 26 May 2012

வாழ்வியல்.. வேகம்

எங்கோ விரைகிறது,,

அந்த நட்சத்திரம்..

பார்வை கொண்டு,,

அதை தொடர்ந்தேன்..

அதன் வேகத்திற்கு ,

தொடர இயலவில்லை..

**
என் கண்களை விட்டு,,

அந்த நட்சத்திரம்,

அகன்ற பின்,,

ஏனோ,,

இந்த வாழ்க்கையும்,,

வேகமாக கழிவது போல,,

உணர்வு...

**
விடியல்,, இரவு,,

தொடர்ந்து மாறி மாறி,,

வரும் வேகம்,,

சற்றே கவலை கொள்ள வைக்கிறது...

**
இதே வேகத்தில்,,

வாழ்க்கை சென்றால்,,

நான்,,

உங்களை விட்டு... ??

சற்று பயமாக,

சற்று வருத்தமாக ,,,

இருக்கிறது...


**
வாழ்வியல்.. வேகம்...பயம்.

**

No comments: