என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Friday 11 May 2012

காற்றோடு காற்றாக

கனத்த மனதுடன்,

எதிர்பாரா அதிர்ச்சியுடன்,,

மௌனமாக நின்றிருந்தேன்,,

மின் மயானத்தின்,,

நண்பரின் உடல் அருகே,,

கொளுந்துவிட்ட எரிந்த தீ நாக்குகள்,,

நண்பரின் உடல் தின்ன,,

காத்திருந்தன..

**
சற்றே வினாடிகளில்,

உடல் சிதைக்குள் தள்ள பட்டது,,

வெளியில் வந்து நின்றேன்,,

மனம் வெறுமையோடு,,

அண்ணாந்து பார்த்தபோது,,

அந்த அடுப்பின் புகை போக்கி வழியே,,

காற்றோடு காற்றாக ,,

கலந்து கொண்டிருந்தான்,,

**
மிக இளம் வயதில்,,

மரணம்,,

கடவுளின் கையாலாகாத்தனம்..

**
நல்ல மனிதரையெல்லாம்,,

வெகு விரைவில் தன் பக்கம் ,,

இழுப்பதில்,,

என்ன சுகம் கண்டானோ இறைவன்.. ?

No comments: