கனத்த மனதுடன்,
எதிர்பாரா அதிர்ச்சியுடன்,,
மௌனமாக நின்றிருந்தேன்,,
மின் மயானத்தின்,,
நண்பரின் உடல் அருகே,,
கொளுந்துவிட்ட எரிந்த தீ நாக்குகள்,,
நண்பரின் உடல் தின்ன,,
காத்திருந்தன..
**
சற்றே வினாடிகளில்,
உடல் சிதைக்குள் தள்ள பட்டது,,
வெளியில் வந்து நின்றேன்,,
மனம் வெறுமையோடு,,
அண்ணாந்து பார்த்தபோது,,
அந்த அடுப்பின் புகை போக்கி வழியே,,
காற்றோடு காற்றாக ,,
கலந்து கொண்டிருந்தான்,,
**
மிக இளம் வயதில்,,
மரணம்,,
கடவுளின் கையாலாகாத்தனம்..
**
நல்ல மனிதரையெல்லாம்,,
வெகு விரைவில் தன் பக்கம் ,,
இழுப்பதில்,,
என்ன சுகம் கண்டானோ இறைவன்.. ?
No comments:
Post a Comment