என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Friday 11 May 2012

நான் இறந்த பொழுது

நான் இறந்த பொழுது,,

பறவைகள் சட்டென்று பறக்காமல் நிற்கவில்லை..

ஓயாத அலைகள் சட்டென்று ஓயவில்லை..

உலகம் ஒரு நொடி அதிர்ந்து போகவில்லை..

போக்குவரத்து நிற்கவில்லை..

அருவிகள் நிற்கவில்லை..

எதுவும் மாறவில்லை..

அதனதன் அடிப்படையில்,,

அவை இயங்கி கொண்டுதான் இருந்தன,,

எதுவும் மாறாது,,

பூமிக்கு மட்டும் சிறு புன்னகை...

ஒரு சின்னஞ்சிறு பாரம் குறைந்ததே என்று,,

இயற்கை,, உலகம்,,

இவை எதற்கும்,,

யாருக்காகவும் நிற்பதில்லை..

No comments: