நான் இறந்த பொழுது
நான் இறந்த பொழுது,,
பறவைகள் சட்டென்று பறக்காமல் நிற்கவில்லை..
ஓயாத அலைகள் சட்டென்று ஓயவில்லை..
உலகம் ஒரு நொடி அதிர்ந்து போகவில்லை..
போக்குவரத்து நிற்கவில்லை..
அருவிகள் நிற்கவில்லை..
எதுவும் மாறவில்லை..
அதனதன் அடிப்படையில்,,
அவை இயங்கி கொண்டுதான் இருந்தன,,
எதுவும் மாறாது,,
பூமிக்கு மட்டும் சிறு புன்னகை...
ஒரு சின்னஞ்சிறு பாரம் குறைந்ததே என்று,,
இயற்கை,, உலகம்,,
இவை எதற்கும்,,
யாருக்காகவும் நிற்பதில்லை..
No comments:
Post a Comment