என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Friday 11 May 2012

காதல்.. பிம்பங்கள்.

அழகென்ற பொழுதுகள்,,

அமைந்ததெல்லாம் உன்னாலே..

**
கனவென்ற பொழுதுகள்,,

அமைந்ததெல்லாம் உன் நினைவாலே..

**
மகிழ்வென்ற பொழுதுகள்,

அமைந்ததெல்லாம் உன் பேச்சாலே..

**
மனதோடு மணம் தெரிந்த பொழுதுகள் எல்லாம்,,

உன் அருகாமையாலே..

**
என் எல்லாவற்றுக்கும் காரணம்,,

உன் வரவாலே..

**
குழம்பிய பொழுதுகளில்,,

மனம் சிக்கி தவிப்பதும் உன்னாலே..

**
இன்று,,

வலி தின்னும் பொழுதுகள் கூட,,

உன் பிரிவாலே..

**
காதல்.. பிம்பங்கள்..அருகாமையில்..
**

No comments: