அம்மா
எனக்கென்று ஒரு கனவு உண்டு,,
எனக்கென்று ஒரு வாழ்வு உண்டு,
எனக்கென்று ஒரு உணர்வு உண்டு,,
எனக்கென்று சில ஆசைகள் உண்டு,,,
எனக்கென்று பெரும் கோபம் உண்டு,...
எனக்கென்று ஒரு வசந்தம் உண்டு,,
எனக்கென்று ஒரு துணை உண்டு,,
எனக்கென்று ஒரு வாழ்விடம் உண்டு..
எனக்கென்று ஒரு உலகம் உண்டு...
**
ஆனால்...
உனக்கென்று நான் மட்டுமே உண்டு,,,
உன் உணர்வுகளில்,,
என்னை பற்றிய நினைவுகள் மட்டுமே உண்டு...
உன் வாழ்விடம், என்னை சுற்றி மட்டுமே...
உன் அழகிய உணர்வுகள், எனக்காக மட்டுமே,...
எனக்கு வயதானாலும் ,,
என்றுமே உன் குழந்தை நான்..
**
கடவுள் கூட கை விடுவான் பல சமயங்களில்..
நீ மட்டுமே என்றுமே அரவணைப்பாய்..
அம்மா ....
அன்பென்ற சொல்லின் அழகிய வடிவம்,,
**
அம்மா.. அன்பு.. அரவணைப்பு...
**
No comments:
Post a Comment