என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Thursday 31 May 2012

கடல் பறவை

அலை பாய்ந்த மனது,

அமைதி கொண்ட ,,

ஒரு மழை நாளில்,,

மெல்ல உற்சாகம் கொண்டு,,

அழகிய வெண்மை நிற,,

கடல் பறவையாக மாறி,,

மெல்ல உயர்ந்து ,,

உயர்ந்து,,

வித்தியாசமான பூமியின்,,

தோற்றத்தை வியந்தபடி,,

பறக்க ஆரம்பித்தேன்...

**
அழகு எங்கும் குடி கொண்ட,,

நிலபரப்பில்,,

ஆங்காங்கே சாத்தானின்,,

கட்டிடங்கள் என்னை தொட்டுவிடும்,,

அளவுக்கு உயர்ந்து நின்றன,,

விந்தையிலும்,,

சிறு கோபத்திலும்,,

நிலபரப்பை கடந்து ,,

பறந்து கொண்டு இருந்தேன்..

**
இப்போது ,,

பூமி நீல வண்ணமாக,

மாறியது..

**
கடல் பரப்பு,,

கண்ணுக்கெட்டியவரை,,

பனிப்பாறைகளும் ,,

அழகிய தீவு கூட்டங்களும்,,

இறைவனின் ரசனையை உரக்க சொல்லியது..

**
நீண்ட நேரம் கடல் பரப்பில்,,

ஆனந்தமாக திரிந்து விட்டு,,

நிலபரப்பை வந்தடைந்த போது,,

ஏனோ,,

மனிதனின் செயற்கை செயல்கள்,,

வெறுப்பை தந்தது..


No comments: