என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Wednesday 6 June 2012

இறந்திருந்தேன் ஒரு நாள்

பரபரப்பான வாழ்வில்,

சட்டென்று ஒரு நாள்,

மௌனம் கண்டேன்..

உள்ளம் அமைதி கொண்டேன்..

மனம் நிசப்தம் கொண்டேன்..

உடல் ஓய்வு எடுத்தேன் ,,..

**
இறுதியில்,,

பரவசம் அடைந்தேன்..

**
இப்போது,,

கடவுளை கண்டேன்,,

விண்ணுலகில்..

***
புரிந்தது இப்போது,,

நான் அங்கே புவியில்.. ,,

இறந்திருந்தேன்..



No comments: