ஊழி காற்றில்,,
வேரோடு விழுந்த,,
பெரும் மரத்தின்,,
பெரும் கிளைகளின் அடியே,
சிக்கிக்கொண்டு,,
குருதி வழிந்த நிலையில்,,
ஒற்றை கையால்,,
கிளையை வெட்டி,,
வெளியே வரும் முயற்சியில்,,
மூர்ச்சையடைந்தேன்,,
வெகு நேரம்..
**
வெகு நேரம்,,
நினைவில்லை..
மெல்ல கண் திறந்து பார்த்த போது,,
எனக்கு கீழே ,,
அந்த பெரிய மரம்,,
வீழ்ந்திருந்தது..
**
மெல்ல புரிந்தது,,,
நான் இறந்திருந்தேன்,, என்று,.
No comments:
Post a Comment