என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Friday, 29 June 2012

நான் இறந்திருந்தேன்,

ஊழி காற்றில்,,

வேரோடு விழுந்த,,

பெரும் மரத்தின்,,

பெரும் கிளைகளின் அடியே,

சிக்கிக்கொண்டு,,

குருதி வழிந்த நிலையில்,,

ஒற்றை கையால்,,

கிளையை வெட்டி,,

வெளியே வரும் முயற்சியில்,,

மூர்ச்சையடைந்தேன்,,

வெகு நேரம்..

**
வெகு நேரம்,,

நினைவில்லை..

மெல்ல கண் திறந்து பார்த்த போது,,

எனக்கு கீழே ,,

அந்த பெரிய மரம்,,

வீழ்ந்திருந்தது..

**
மெல்ல புரிந்தது,,,

நான் இறந்திருந்தேன்,, என்று,.

No comments: