என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Friday 29 June 2012

வெறுமை சூழ்ந்து,

சட்டென்று வெறுமை சூழ்ந்து,,

ஒரு வினாடி நேரத்தில்,,


திடுக்கிடலோடு விழித்தேன்..


**
ஏனோ கலைந்தது உறக்கம்,,

நேரம் பார்த்தேன்,,


முன்னிரவு முடிந்து,,


பின்னிரவு துளிர்க்கும் நேரம்..


**

தனிமை இரவு,,

என்னவென்று தெரியாமல்,,


நிலை கொள்ளாமல் தவிக்கும்,,


மனம்..


**

நிறைய தண்ணீர் குடித்தேன்,,

கடவுளின் படத்தை,


தலையணை அருகே வைத்தேன்,


ஆனாலும்,,


உறக்கம் வரவில்லை,,


**

குழப்படைந்த உள்ளம்..

இயற்கையை காணும்,,


குழந்தை மனதை போல,,


அலைபாய்கிறது..


**

சற்றே சிந்தனைக்கு பின்,,

வெளியே வந்தேன்..


அழகிய நிசப்தம் கொண்ட ,,


பின்னிரவு ஈர்த்தது..


**

முழு நிலவும்,,

கண்சிமிட்டும் விண்மீன்களும்,,


ஏதோ ஒரு வேலையில்,,


அமைதியாக ஈடுபட்டு கொண்டு,,


இருந்தன..


**

சிறிது நேரம் ,,

வானம் பார்த்தேன்,,


மெல்ல,,


அமைதி கொண்டது உள்ளம்..


உறங்க செல்கிறேன் மீண்டும்..
.

No comments: