நான் கவிஞன் அல்ல,,
என்று உறுதியாக கூறுகிறேன் மீண்டும்,
காரணம்,,
கவிதைக்கு சொற்கள் அழகு,,
வாக்கியங்கள் அழகு,,
அடையாள குறிகள் அழகு..
தெள்ளு தமிழ் அழகு,,
இலக்கண தமிழ் அழகு..
பேச்சு தமிழும் அழகு..
**
அந்த அழகு சொற்களை,,
படைக்க வேண்டுமெனில்,,
காதலிக்க தெரிந்திருக்க வேண்டும்,,
அழகிய ரசனை உணர்வு வேண்டும்,,
வாழ்வியல் புதிய பார்வை வேண்டும்,
சில நேரங்களில் தீராத வருத்தம் வேண்டும்,,
**
எனக்குள் மேற்கூறிய அனைத்தும் இல்லை,,
ஒன்றை தவிர,,
வருத்தங்கள், வலிகள் மட்டுமே என்னுள்..
உள்ளிருந்து வலிகளை ,,
வலைப்பதிவின் வழியே தெளிப்பதில்,
என் மனசுமைகள்,,
சற்றே குறைவது போன்ற,
ஒரு பிரமை எனக்குள்..
அவ்வளவே ...
**
நன்றி வணக்கம்..
**
No comments:
Post a Comment