என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Saturday 23 June 2012

மனசுமை குறைய

நான் கவிஞன் அல்ல,,

என்று உறுதியாக கூறுகிறேன் மீண்டும்,

காரணம்,,

கவிதைக்கு சொற்கள் அழகு,,

வாக்கியங்கள் அழகு,,

அடையாள குறிகள் அழகு..

தெள்ளு தமிழ் அழகு,,

இலக்கண தமிழ் அழகு..

பேச்சு தமிழும் அழகு..

**
அந்த அழகு சொற்களை,,

படைக்க வேண்டுமெனில்,,

காதலிக்க தெரிந்திருக்க வேண்டும்,,

அழகிய ரசனை உணர்வு வேண்டும்,,

வாழ்வியல் புதிய பார்வை வேண்டும்,

சில நேரங்களில் தீராத வருத்தம் வேண்டும்,,

**
எனக்குள் மேற்கூறிய அனைத்தும் இல்லை,,

ஒன்றை தவிர,,

வருத்தங்கள், வலிகள் மட்டுமே என்னுள்..

உள்ளிருந்து வலிகளை ,,

வலைப்பதிவின்  வழியே தெளிப்பதில்,

என் மனசுமைகள்,,

சற்றே குறைவது போன்ற,

ஒரு பிரமை எனக்குள்..

அவ்வளவே ...

**
நன்றி வணக்கம்..
**

No comments: